அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் மனித நேயம் அவசியமாக உள்ளது - கேரளா முன்னாள் ஆளுநர் சதாசிவம் பேச்சு
வேலூர் 10-12-25 அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் மனிதநேயம் அவசியமாக உள்ளது காலநிலை மாற்றம் போன்ற பிரச்சணைகள் கண்டுபிடிப்புகளால் சரி செய்ய முடியாது - மாணவர்கள் விதிகள் சட்டங்களை அறிந்திருக்க வேண்டும் - உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான .சதாசிவம் பேச்சு வேலூர், டிச.10 - வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் துறை சார்பில் 19-ஆவது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை மாநாடு அண்ணா அரங்கத்தில் விஐடி வேந்தர் முனைவர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான .சதாசிவம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தார் இதில் விஞ்ஞானிகள் சதிஷ்ரெட்டி,மதுசூதன் ரெட்டி,தாலபில் பிரதீப் ஆகியோர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டு விழாமாநாட்டு மலரையும் வெளியிட்டனர் இந்த சர்வதேச மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் பல்வேறு நாடுகள...