Posts

Showing posts from April, 2022

மே தின வாழ்த்துக்கள்

Image
B. விஜயசேகர், நிருபர் மக்கள் குரல் வேலூர்

பாலாறு பெருவிழா கலந்தாய்வுக் கூட்டம்

Image
பாலாறு பெருவிழா புரவலர்கள்கலந்தாய்வுக் கூட்டம் அகில பாரதீய சந்தியாசிகள் சங்கம் மற்றும் நாராயணி பீடம் சக்தி அம்மா ஒருங்கிணைந்து பாலாறு பெருவிழா வரும் ஜீன் 29 முதல் ஜூலை 3ம் தேதி வரை 5 நாட்கள் வேலூர் திருமலைக் கோடி தங்கக் கோவில் நாரா பணி மகாலில் நடக்கிறது. இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் ரத்தினகிரிபாலமுருகன் கோவிலில் இன்று நடந்தது. [அகில பாரதீய சந்நியாசிகள் சங்க தலைவர் செந்தில் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில், ரத்தினகிரிபாலமுருகன் கோவில் பரம்பறை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் முன்னாள் ஆட்சியர் ராஜேந்திரன் மாநாடு பொறுப்பாளர்கள் கோதண்டபாணி, சுதாகர், குமார், சுவாமி சிவராமானந்தா குணசேகள், ஆம்பூர் ஜெய்சங்கர், சிவனார் அமுது-உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை

Image
தொழிற் கல்வி ஆசிரியர்கள் ஆலோசனை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் குடியாத்தத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாநில தலைவர் ஜனார்த்தனன் பேசியதாவது: மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நல்வழிப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக முதல்வர் வகுக்க வேண்டும். பல இடங்களில் ஆசிரியர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக நடந்து கொண்டுள்ளது. மருத்துவ பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததை போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். மாணவர்களை கண்டிக்கும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புக்கள், நல்வழிக்கல்வி வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். கல்வி இணைச் செயல்பாடுகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிர்வாகிகள் மகாலிங்கம், கலைச்செல்வன், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வெயிலுக்கு பெண் பலி

வெயிலுக்கு பெண் பலி ராணிப்பேட்டை , நவல்பூரை சேர்ந்தவர் மணி, 65. விவசாயி. இவர் மனைவி சந்தியா, 55. இவர் நேற்று  பிற்பகல் 11:00 மணிக்கு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். சிகிச்சை முடிந்து மதியம் 3:00 மணிக்கு வெளியே வந்த அவர் கடும் வெயிலில் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றார். அப்போது அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். வாலாஜாபேட்டை போலீசார் நடத்திய  விசாரணையில், கடும் வெயிலின் தாக்கத்தில் அவர் இறந்தது தெரியவந்தது.

விசாரணை

வேறோருவர் வங்கி கணக்கில் தவறுதலாக போடப்பட்ட  பணம் குறித்து விசாரணை நாட்றம்பள்ளி அடுத்த கவுக்காபட்டியை சேர்ந்தவர் கல்யாணி, 53. இவர் சிக்கணாங்குப்பம் ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 10 மாதமாக கூலிப்பணம் வரவில்லை. நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை. ஊராட்சி தணிக்கை  குழுவினர்  நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் 100 நாள் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். அதில், கல்யாணி வேலை செய்ததற்கு வழங்க வேண்டிய கூலிப்பணம் 18,791 அவரது கணக்கில் செலுத்தாமல், கற்பகம் என்பவர் வங்கி கணக்கில் செலுத்தி வந்தது தெரியவந்தது. கற்பகத்திடமிருந்து பணத்தை மீட்டு கல்யாணிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தவர்களுக்கு கூலி சரியாக வழங்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டாசில் 2 பேர் கைது

Image
குண்டாசில் 2 பேர் கைது ஆற்காட்டில், கஞ்சா வியாபாரிகள் இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். ஆற்காட்டை சேர்ந்தவர்கள் கணேஷ், 28, சரண், 21. கஞ்சா வியாபாரிகளான இவர்களை ஆற்காடு போலீசார் கடந்த 5 ம் தேதி கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு எஸ்.பி., தீபா சத்யன் பரிந்துரை செய்தார். குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம்  வழங்கினர்.

மாற்றம்

Image
பெண் டாக்டர் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் 17 ம் தேதி  ஆட்டோவில் நான்கு பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். வேலுார் வடக்கு போலீசார்,   வ.உ.சி., நகரை சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன்,  சந்தோஷ்குமார் மற்றும் சிறுவர் என ஐந்து பேரை கைது       செய்தனர். நான்கு பேர் வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும், சிறுவர் சென்னை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். சிறுவர் தவிற மற்றவர்கள் குண்டர் சட்டத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை வேலுார் மகிளா கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளைக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் இந்த வழக்கு வேலுார் மகிளா விரைவு நீதிமன்றத்திற்கு  மாற்றப்பட்டது. 17 வயது சிறுவனுக்கும் தண்டனை கிடைக்கும் வகையில் வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை வேலுாரிலுள்ள தனியார் மருத்துவமனையில்  நடத்தப்பட்டது. இதனால் மற்ற குற்றவாளிக

போலீஸ் சஸ்பெண்ட்

Image
ஓட்டலில் தகராறு   போலீஸ்காரர் சஸ்பெண்ட் வேலுார் மூஞ்சூர்பட்டை சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ம் தேதி இரவு 10:00 மணிக்கு, வேலுார் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் குடி போதையில் சென்ற இவர் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் அங்கிருந்தவர்களை தாக்கி தகராறு செய்துள்ளார். புகார்படி வேலுார் தெற்கு போலீசார் குமரேசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.  குமரேசனை சஸ்பெண்ட் செய்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி., தீபா சத்யன்  உத்தரவிட்டார்.

வேலூரில் 108 டிகிரி வெயில்

Image
வேலுாரில் வெயில் 108 டிகிரி வெயிலுக்கு பெயர் போன வேலுாரில் கடந்த சில நாட்களாக அதிக வெப்ப நிலை காணப்பட்டது. நேற்று  106 டிகிரி பதிவானது. (41.3) இன்று 108 டிகிரி  (42.2) பதிவானது. காலை முதலே அனல் காற்று வீசியது. கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். சாலையில் கானல் நீர் தெரிந்தது. நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. வரும் 4 ம் தேதி அக்னி தொடங்குகிறது. அதற்கு முன்னதாகவே வெப்பநிலை உயர்வினால் வேலுார் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குளிர் பானம், இளநீர் கடைகளில் கூட கூட்டம் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்தை பெரிதும் பாதிக்கப்பட்டது. வேலூரின் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை Max temp- Apr 30 42.2 °C  108.0°F

புகார்

Image
தலைமை ஆசிரியை மீது பெற்றோர் புகார் குடியாத்தம் நெல்லுார்பேட்டையில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு கழிவறை போன்ற வசதிகள் செய்து தரக்கோரி பெற்றோர் பள்ளிக்கு அடிக்கடி வந்து முறையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை பணி செய்ய விடாமல் பெற்றோர் தடுப்பதாக  குடியாத்தம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்,  வேலுார் மாவட்ட கல்வி அலுவலரிடம் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது புகார் செய்தனர். தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரை வாபஸ் பெறாவிட்டால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என குறிப்பிட்டிருந்தனர். ஒரு வாரத்தில் விசாரணை நடத்துவதாக கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

குண்டாசில் கைது

Image
குண்டாசில் கைது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர் தீபராம், 32. இவர் கிருஷ்ணகிரியிலிருந்து வேலுாருக்கு, குட்கா பொருட்கள் கடத்திய போது கடந்த மாதம் வேலுார் வடக்கு போலீசார் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர். இவர் மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் பரிந்துரை          செய்தார். குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையிலுள்ள அவரிடம்  வழங்கினர்.

கைது

Image
மாணவி கர்ப்பம் வாலிபர் கைது குடியாத்தம் அருகே செருவங்கியை சேர்ந்தவர் விக்னேஷ், 20. ஏ.சி. மெக்கானிக். இவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக  கூறி, கடத்திச் சென்று குடும்பம் நடத்தினார். இதில் மாணவி ஆறு மாதம் கர்ப்பமானார். இதனால் திருமணம் செய்து கொள்ளாமல் மாணவியை விரட்டி விட்டார். புகார்படி குடியாத்தம் மகளிர் போலீசார் போக்சோவில், விக்னேசை  கைது செய்து வேலுார்  சிறையில் அடைத்தனர்.

விசாரணை

Image
10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு மீண்டும் ஹால்டிக்கெட் குடியாத்தம் அருகே, வளத்துாரை சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார். கொரோனா தொற்று பரவியதால், கடந்தாண்டு 10 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதனால் கணேசனுக்கு தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாணவர் கணேசனுக்கு மீண்டும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. வேலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி உத்தரவுபடி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தெரியாது

Image
*இந்தியாவில் தெரியாது!* ஏப்ரல் மாதத்தின் கடைசி நாளான இன்று  இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் நடைபெற இருக்கிறது. பகுதியளவு தென்பட உள்ள இந்த கிரகணமானது 4 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் சனிக்கிழமை ஐஎஸ்டி நேர நிலவரப்படி நண்பகல் 12.15 மணி முதல் பிற்பகல் 2.11 மணி வரையிலும் கிரகணம் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

தன்வந்திரி பீடத்தில் விழா

Image
வாலாஜா தன்வந்திரி பீடத்தில்  அட்சய திருதியில் ஒரு லட்சம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜை இராணிப்பேட்டைடை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 3.5.2022, செவ்வாய்கிழமை ஸ்ரீ ராஜமாதங்கி ஜெயந்தி, அன்னபூரணி ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு சோளிங்கர் சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில் ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஹோமம், அன்னபூரணி ஹோமம், அஷ்ட லஷ்மி ஹோமம், சாம்ராஜ்ய லஷ்மி ஹோமம், மஹா லஷ்மி ஹோமத்துடன் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் நடைபெறுகிறது அன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு புண்ணியாவாசனம், யாகசாலை பூஜைகள், கும்ப அலங்காரம், கும்ப பூஜை நடைபெற்று மஹா கணபதி ஹோமத்துடன் சிறப்பு ஹோமங்கள் நோய்கள் நீங்கவும், ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி அருள் பெறவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் 11 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 12.00 மணிக்கு லக்ஷ்மி குபேரருக்கு மஹா திருமஞ்சனம் சிறப்பு அ

அப்பா ஏன் பின் தங்கி இருக்கிறார்.

Image
*அப்பா ஏன்* *எப்போதும்* *பின்தங்கி* *யிருக்கிறார் என்று தெரியவில்லை.....* 1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். *இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.* 2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். *இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.* 3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. *அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.*  4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூ

துன்பகாலங்களில் கடவுள்

Image
​​துன்ப காலங்களில் கடவுள் ,,, ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக் கேட்டான். "என்னுடன் வருவது யார்?" "நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது. அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின. ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது. 'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன. அவன் சு

41 முறை ரத்த தானம்

Image
👍👍👍..🙏...  எங்கள் திருமண நாளை வாழ்த்திய அனைத்து நல்ல.....👌.. உள்ளங்களுக்கும்!! மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!!-🙏-👏👏... .k  சாமிநாதன்...  சி..பி  எம்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்!.🎂..  குமாரி மாதர் சங்க மாவட்ட துணை தலைவர்.🎂 Aidwa.-குடியாத்தம்..!❤.. -வேலூர்..மாவட்டம்-🌹.  👍👍👍.  நாற்பத்தி. ஒன்றாவது( 41-முறை)... முறை ரத்ததானம்--❤-  இருபத்தி எட்டாவது(28 )திருமண நாளை முன்னிட்டு!-👌 - எங்கள் திருமண நாளை முன்னிட்டு----41---- முறை-- ரத்த தானம் செய்யப்பட்டது!!-  கே- சாமிநாதன்  - முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்- moongappattu... Pta...தலைவர் - தட்டப்பாறை..... .எஸ் குமாரி- பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்..தட்டப்பாறை.  பொன்னாங் கட்டி- ஊர் -குடியாத்தம்-👍- வேலூர் மாவட்டம்-❤... இவர்களை வாழ்த்துவோம்.

காலை வணக்கம்

Image
🙏 *இனிய காலை வணக்கம்.* *பகவான் ராமர் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.*  *அப்போது பகவான் ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா, ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.* *நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.* *நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.* *லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது.*  *நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.* *லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.* *லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன்.* *நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர்.* *அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?*  *நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும்.*  *நரகம் யாருக்கும்

தேசிய மாநாடு

Image

மே 1ம் தேதி

Image
*தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு* *01.05.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.* *01.) கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி  மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் .*  *2.) 2020 - 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.* *3.) 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு  உரிமை உண்டு* *4.)18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் கிராமத்தின் வளர்ச்சிக்கு  ஆக்கப்பூர்வ தீர்மானம் ஏற்றவும்.*  *5.)உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல்  தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை  என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்கள்க்கு  உரிமை உண்டு.* *6.) கிராம சபை கூட்டத்தில்  மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.*  *6.)ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்ட

ஆயத்த கூட்டம்

Image
*அரசு பொதுத்தேர்வு முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், பறக்கும்படை* *உறுப்பினர்களுக்கான ஆயத்த கூட்டம்* *பணி நியமண ஆணைகள் வழங்கி மெட்ரிக் பள்ளி இயக்குநர் அ.கருப்பசாமி பேசினார்.* ***   ***   *** மே 5-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு பணிகளுக்கான பணி ஆணைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அ. கருப்பசாமி வழங்கி பேசினார். அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) ஆயத்த கூட்டம் 29-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குநர் அ.கருப்பசாமி அவர்களின் தலைமை நடைபெற்றது.   வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி வரவேற்று பேசினார்.  மாவட்டக்கல்வி அலுவலர் த.சம்பத்து, வேலூர் மண்டல அரசுத்தேர்வுகள் துறையின் உதவி இயக்குநர் தாயம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.   மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் பேசும் போது கூறியதாவது.. முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக சென்று உர

ஆணை வழங்கும் நிகழ்ச்சி

Image
*அரசு பொதுத்தேர்வு முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், பறக்கும்படை* *உறுப்பினர்களுக்கான ஆயத்த கூட்டம்* *பணி நியமண ஆணைகள் வழங்கி மெட்ரிக் பள்ளி இயக்குநர் அ.கருப்பசாமி பேசினார்* ***   ***   ***. மே 5-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு பணிகளுக்கான பணி ஆணைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அ. கருப்பசாமி வழங்கி பேசினார். அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) ஆயத்த கூட்டம்  வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குநர் அ.கருப்பசாமி அவர்களின் தலைமை நடைபெற்றது.   வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி வரவேற்று பேசினார்.  மாவட்டக்கல்வி அலுவலர் த.சம்பத்து, வேலூர் மண்டல அரசுத்தேர்வுகள் துறையின் உதவி இயக்குநர் தாயம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.   மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் பேசும் போது கூறியதாவது.. முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக சென்று உரிய வசதிகள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.  தேர்

பணி நியமன ஆணை வழங்கல்

Image
*அரசு பொதுத்தேர்வு முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், பறக்கும்படை* *உறுப்பினர்களுக்கான ஆயத்த கூட்டம்* *பணி நியமண ஆணைகள் வழங்கி மெட்ரிக் பள்ளி இயக்குநர் அ.கருப்பசாமி பேசினார்* ***   ***   ***. மே 5-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு பணிகளுக்கான பணி ஆணைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அ. கருப்பசாமி வழங்கி பேசினார். அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) ஆயத்த கூட்டம்  வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குநர் அ.கருப்பசாமி அவர்களின் தலைமை நடைபெற்றது.   வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி வரவேற்று பேசினார்.  மாவட்டக்கல்வி அலுவலர் த.சம்பத்து, வேலூர் மண்டல அரசுத்தேர்வுகள் துறையின் உதவி இயக்குநர் தாயம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.   மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் பேசும் போது கூறியதாவது.. முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக சென்று உரிய வசதிகள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.  தேர்

போலீசுக்கு குழந்தை சல்யூட்

Image
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் போலீஸ் நிற்பதை கண்டு இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை பயந்து நின்றார். உதவி ஆய்வாளரின் தொப்பி அணிந்து தைரியமாக சுற்றி வந்தார் மகன். குழந்தையின் ஆசை நிறைவேற்றினார் காவல் உதவி ஆய்வாளர்.  வாணியம்பாடி எப் 29 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக முஜக்கீர் என்பவர் ரம்ஜான் 27வது இரவு சிறப்பு தொழுகை முடித்து விட்டு தன்னுடைய 4 வயது மகன் முபஷ்ஷீர் உடன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருப்பது கண்டு அவர் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பயந்து நின்றார். அப்போது அவரது 4 வயது மகன் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி காவல் உதவி ஆய்வாளர் ராஜாயிடம் சென்று அங்கிள் நான் உங்கள் தொப்பி அணிந்து பைக் ஓட்டணும் இன்று ஆசை தெரிவித்தார். இதனை தொடர்ந்து குழந்தையின் ஆசை நிறைவேற்றும் வகையில் உதவி ஆய்வாளர் ராஜா தன்னுடைய இருசக்கர வாகனத்தில் குழந்தையை உட்காரவைத்து தான் அணிந்திருந்த தொப்பியை

கவிஞர் வைரமுத்து

Image
வேலூர்மாவட்டம் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றோ பொது மொழி என்றோ பொதுவெளியில் இனி யாரும் இந்த கருத்தை முன் வைக்கக் கூடாது - இந்தி பேசுகிறவர்கள் மட்டும் தான் இந்தியா என்றால் இந்தி உங்கள் தேசிய மொழியாக இருந்து விட்டுப் போகட்டும் - வேலூரில் கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

பள்ளிக்கு பொருள்கள் வழங்கும் விழா

Image
*நெமிலி ஊராட்சி ஒன்றியம்!* *பரமேஸ்வரமங்கலம் கிராமம்!!* *அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.70,000/- மதிப்புள்ள 20 மின்விசிறிகள் (Fan) மற்றும் 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை (RO water Purifier) நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் வழங்கினார் !!!* கடந்த இரு வாரங்களுக்கு முன் பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆய்வு மேற்கொள்ள, நெமிலி ஒன்றிய *பெருந்தலைவர் பெ.வடிவேலு* அவர்களுக்கு, பள்ளியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று *பெருந்தலைவர் வடிவேலு* அவர்கள் பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து தலைமை ஆசிரியரோடு கலந்தாலோசித்தார். அப்போது *உயர் நிலைப்பள்ளியை மேனிலைப்பள்ளியாக* தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதோடு மாணவர்கள் இந்த கோடை காலத்தில் காற்று வசதி குறைவாக உள்ளதால் வெப்பத்தால் தவித்து வருகின்றனர். எனவே 20 Fan மற்றும் சுத்தமான குடிநீர் வழங்க, 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO water Purifier) பள்ளிக்கு வாங்கி தருமாறு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இன

நலதிட்டம்

Image

ஹரியின் பெருமை

Image
*பராசரர் ஹரியின் பெருமைப் பற்றி கூறுகிறார்...* #பத்த:#பரிகரஸ்தேந_மோக்ஷாய_கமநம்_ப்ரதி । #ஸக்ருதச்_சாரிதம்_யேன_ஹரிரித்யக்ஷரத்_வயம் ।।           எவனொருவனால் #ஹரி என்னும் இவ்விரண்டு எழுத்துக்களும் ஒரு தடவை சொல்லப்பட்டனவோ, அவனால் மோக்ஷம் செல்வதற்குச் செய்ய வேண்டிய காரியங்களெல்லாம் செய்யப்பட்டன.           திருப்பாவையில் ஆறாம் பாட்டின் (புள்ளும்) ஈற்றடியில் #உள்ளம்_புகுந்து_குளிர்ந்து என்ற வரி வருகிறது. இங்கு உள்ளம் குளிர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எதனால் குளிர்ந்ததெனில் அரியென்ற பேரரவம் உட்புகுந்ததனாலென்று சொல்லப்பட்டுள்ளது. அரியென்ற பேரரவம் யாருடையதென்னில், முனிவர்களும் யோகிகளுமானவர்களினுடையதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்குமே வாசி உண்டு.‌கேண்மின்! பகவத் ப்ரவணர்களில் இரு வகுப்புண்டு. குணாநுபவ நிஷ்டர்கள் என்றும், கைங்கர்ய நிஷ்டர்கள் என்றும். பரதாழ்வான் போல்வார் குணாநுபவ நிஷ்டர்கள். இளையபெருமாள் போல்வார் கைங்கர்ய நிஷ்டர்கள். ஆக, இந்த வாசியைப் பற்றவே ஆங்காங்கு இரண்டு சொற்களையிட்டுச் சொல்வது.‌முனிவர்களும் யோகிகளும் என்றவிடத்தும் இவ்விரு வகுப்பினர்களே விவஷிதர்களாகக் கடவர

14 வருஷம் ராஜா

Image
*****பதினான்கு  வருஷ  ராஜா***** எப்போதோ  நடக்கவேண்டிய  இந்த அற்புதமான  பட்டாபிஷேகம் பதினான்கு வருஷங்களுக்கு பிறகு அயோத்தியில் கோலாகலமாக நடக்கப்போகிறது. பதினான்கு வருஷங்கள் காத்திருந்தான் அந்த வயோதிக  செருப்பு தைக்கும் தொழிலாளி.  பதினான்கு வருஷங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் அவன் மனதில் மீண்டும் திரையிட்டது. அவனுக்கு  ராமன் மேல் கொள்ளை பிரியம். வீரன்,  அழகன், கம்பீரன், நீலவண்ணன் ராமன் இன்னும் ஒரு சில தினங்களில் சக்ரவர்த்தி தசரதனால் யுவராஜா என்று பட்டாபிஷேகம் செய்யப்பட இருக்கிறான். அவனுக்கு எல்லோரும் இப்போதே கூட்டம் கூட்டமாக வந்து பரிசுகள் அளிக்கிறார்கள்.  பரிசுகள்  ஒரு மலைபோல் குவிகிறது. பொன்னும் பொருளும், பீதாம்பரம், யானை, குதிரைகள் தேர்கள் என்னென்னவோ பரிசுகள். ''என்னால்  என்ன கொடுக்க முடியும்.  நான் செருப்பு தொழிலாளி'' நல்ல  அற்புதமான  மணமிகுந்த  சந்தன குமிழ் வைத்து  மிருதுவான  காலை அலங்கரிக்க,  ஒரு ஜோடி  பாதுகையை .  மூன்று நான்கு நாட்களில்  தயார் செய்தான். அதை  எடுத்துக்கொண்டு மறுநாள் காலை  அரண்மனை வாசலில் நின்றான். ஒரு ரிஷிகள் கூட்டம் உள்ளே சென்றது.  ஒரு

செளந்தர்ய லஹரி

Image
*****சௌந்தர்ய லஹரி***** செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் செளந்தர்ய லஹரி சொல்லி தேவியின்  அருளை பெறலாம்.* ஆதிசங்கரர் விஜய யாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது,  கயிலாயத்திற்கு  சென்றார். கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம் ,பார்வதி ,பரமேஸ்வரர் இருவரும்  தங்களுக்குள்," கீழே பூலோகத்திலிருந்து நமது கயிலாயத்திற்கு  ஒரு குழந்தை வந்திருக்கிறது".இந்த இளம்வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது "என்று பேசிக் கொண்டார்கள்.இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தது ஆதி சங்கரருக்கு தெரியாது. திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர்.அவரது இரு கைகளிலும் சுவடிகள் பட்டன.ஆனால் ஒன்றைத்தான் அவர் பிடித்தார்.மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே!  என்று  பிடுங்கி விட்டார்.நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார்.கையில் ஒரு சுவடிதான் இருந்தது.இன்னொன்றைக் காணவில்லை.சங்கரர் மனம் நொந்து அழுது  மேலே பார்த்த போது,அங்கு பார்வதி,பரமேஸ்வரர்  தரி

விஐடி விழாவில் கவிஞர் வைரமுத்து

Image
வேலூர்      ஹிந்தி பேசுபவர்களுக்கு தான் இந்தியா என்றால் இருந்துவிட்டு போகட்டும் - தமிழியக்க பாவேந்தர் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு- ஹிந்தி வந்தால் பிளவு வரும் - கவிஞர் அப்துல்காதர் பேச்சு   ______________________________________     வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 132 ஆவது பிறந்த நாள் விழா வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழியக்க பொதுசெயலாளர் அப்துல்காதர்,பொருளாளர் பதுமனார்,உள்ளிட்டோர்கலந்துகொண்டனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார்      இந்த விழாவில் தமிழியக்க பொதுசெயலாளர் அப்துல்காதர் பேசுகையில் பாவிருக்கும் தமிழ் இருக்க பாய் விரிக்கும் ஹிந்திக்கே ஆட்சி என்றார் பாவேந்தர் பாவிருக்கும் தமிழிருக்க பலபேருக்கு பாய் விரிக்கும் ஹிந்தி ஆட்சி என்றார் அந்தி வந்தால் நிலவு வரும் ஹிந்தி வந்தால் பிளவு வரும் என பேசினார்      பின்னர் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில் ஹிந்தியை எதிர்க்கவும் தமிழை காக்க

ஆன்மீகம்

Image
🙏 *இனிய காலை வணக்கம்.* *பகவான் ராமர் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.*  *அப்போது பகவான் ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா, ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.* *நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.* *நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.* *லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது.*  *நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.* *லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.* *லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன்.* *நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர்.* *அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?*  *நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும்.*  *நரகம் யாருக்கும்

மே 1ம் தேதி முக்கியம்

Image
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 அன்று தொழிலாளர் தினத்தையொட்டி நடத்தப்படும் கிராமசபை கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும், கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்தும், கிராமங்களில் நெகிழி இல்லா நிலையை உருவாக்குவது குறித்தும் கிராம பஞ்சாயத்து தலைவர். துணைத்தலைவர் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்களுடனான கலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் இஆபூ. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் கே.பி.ஜே திருமண மண்டபத்தில் திமிரி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளிலுள்ள 28 ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தையொட்டி நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும், கிராமப்புறங்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், கிராமப்புறங்களில் நெகிழி இல்லாத நிலையை அடைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

Image
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 அன்று தொழிலாளர் தினத்தையொட்டி நடத்தப்படும் கிராமசபை கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும், கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்தும், கிராமங்களில் நெகிழி இல்லா நிலையை உருவாக்குவது குறித்தும் கிராம பஞ்சாயத்து தலைவர். துணைத்தலைவர் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்களுடனான கலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் இஆபூ. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் கே.பி.ஜே திருமண மண்டபத்தில் திமிரி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளிலுள்ள 28 ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தையொட்டி நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும், கிராமப்புறங்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், கிராமப்புறங்களில் நெகிழி இல்லாத நிலையை அடைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட

திருப்பத்தூர் ஆட்சியர்அறிக்கை

Image
அன்புடையீர் வணக்கம்! 1) நாளை 30.04.2022 காலை 8.30 மணிக்கு  திருப்பத்தூர் வட்டம் மடவாளம் கிராமத்தில் சிவன் கோயில் திருப்பணிகளை  தொடங்கி வைத்தல். 2) அதனை தொடர்ந்து  மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. 3) நாளை காலை 9.00 மணிக்கு திருப்பத்தூர்  மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.    இம்முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அனைவரும் வருக. அன்புடன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (கூ.பொ) திருப்பத்தூர் மாவட்டம்.

முக்கியம்

Image
*தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு* *01.05.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.* *01.) கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி  மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் .*  *2.) 2020 - 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.* *3.) 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு  உரிமை உண்டு* *4.)18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் கிராமத்தின் வளர்ச்சிக்கு  ஆக்கப்பூர்வ தீர்மானம் ஏற்றவும்.*  *5.)உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல்  தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை  என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்கள்க்கு  உரிமை உண்டு.* *6.) கிராம சபை கூட்டத்தில்  மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.*  *6.)ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்ட

தலைமை செயலாளர் அறிக்கை

Image
*தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு* *01.05.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.* *01.) கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி  மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் .*  *2.) 2020 - 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.* *3.) 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு  உரிமை உண்டு* *4.)18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் கிராமத்தின் வளர்ச்சிக்கு  ஆக்கப்பூர்வ தீர்மானம் ஏற்றவும்.*  *5.)உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல்  தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை  என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்கள்க்கு  உரிமை உண்டு.* *6.) கிராம சபை கூட்டத்தில்  மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.*  *6.)ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்ட