Posts

Showing posts from March, 2022

தெரிந்து கொள்வோம்

Image
 இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்ட வேலுார் சிப்பாய் புரட்சி இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடந்தது வேலுாரில் தான். இந்தியாவில் சுதந்திர காற்றை சுவாசித்து வரும் இன்றைய இளைய தலைமுறையினர் சுதந்திரம்  எப்படி கிடைத்தது, அதற்கான மூல காரணம் குறித்து அறிந்து கொள்ளவில்லை. பழைய தலைமுறையினர் அவர்களுக்கு அதை பற்றி சொல்ல நேரம் கிடைக்காதபடி நம் வாழ்க்கை முறை தற்போது அமைந்துள்ளது. இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியரும் அறிந்திருக்க வேண்டியது இந்திய விடுதலைக்கு வித்திட்ட வேலுாரில் நடந்த சிப்பாய் புரட்சி       ஆகும். ஜாலியன் வாலாபாக்கில் கி.பி., 1857 ல் நடந்த சிப்பாய் கலகம் இந்திய சுதந்திர போரில் முக்கிய பங்கு வகிப்பது உண்மைதான். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே வேலுார் கோட்டையில் நடந்த சிப்பாய் கலகம், பின்னால் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஒரு முன்னோடியாக விளங்கியது. வரலாறு: கி.பி., 1799 ம் ஆண்டு  ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடந்த போரில் ஆங்கிலேயர்களால்  திப்புசுல்தான்  கொல்லப்பட்டார். இதனால் அவரது 12 மகன், 8 மகள்கள், உறவினர்கள் என 1,378 பேர் கைது செய்

சந்திப்பு

Image
சந்திப்பு டெல்லி நாடாளுமன்ற வளாகத்ததில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். திமுக எம்பிக்கள் கனிமிமொழி, கதிர்ஆனந்த் உடனிருந்தனர்.

சர்க்கரை நோயாளிகள் முக்கிய தகவல்

Image
சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கிய தகவல் சித்தோடு நவநீதன் என்பவர் தெரிவித்த தகவல் சர்க்கரை நோயாளிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறாத புண் ஏற்பட்டு விடும். பலருக்கு ஆங்கில மருத்துவமனைகளில் காலை வெட்டி விடுவார்கள். ஆனால் வெள்ளக்கோவிலில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 8 வது கி.மீ., தாசவநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் 150 ஆண்டு பாரம்பரியம் மிக்க வைத்திய குடும்பங்களை சேர்ந்தவர்கள் புண் உள்ள இடத்தில் எண்ணெய்க் கட்டு போடுவார்கள். ஒரு வாரத்திற்குள் புறையோடிய புண் குணமாகி தழும்பு கூட இருக்காது. முன்கூட்டியே அனுமதி வாங்கி விட்டு செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயாளிகள் இதை முயன்று பார்க்கலாமே.

வில்வ துளசி ஆன்மீகம்

Image
எல்லாம் நன்மைக்கே கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.  அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான்.  அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான். “இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.  ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது?  என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான்.  எதுவும் உதவி கிடைத்தபாடில்லை.  இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான்.  அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.. இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை.  கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொண்டான். ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகை

வலம்புரி விநாயகர் செய்திகள்

Image
🚩  *காலை தரிசனம்----------!* *வஸந்த நவராத்திரி தரிசனம்.....!!* இன்று வெள்ளிக்கிழமை ! பிலவ வருடம் :  பங்குனி மாதம் 18 ஆம் நாள்....! ஏப்ரல் மாதம் : முதல் தேதி :  (01-04-2022) சூரிய உதயம் :  காலை : 06-23 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-25 மணி அளவில் ! இன்றைய திதி :  வளர்பிறை : பிரதமை...! அமாவாசை.. காலை 12-30 மணி வரை அதன் பிறகு பிரதமை....! இன்றைய நட்சத்திரம் :  உத்திரட்டாதி... காலை 11-10 மணி வரை ! அதன் பிறகு ரேவதி...! இன்று  மேல் நோக்கு நாள் ! யோகம் :  சித்தயோகம் !  அமிர்தயோகம் !! சந்திராஷ்டமம் : இன்றும் சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! எமகண்டம் : மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! குளிகை :  காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! சூலம் :  மேற்கு : பரிகாரம் : வெல்லம் ! கரணம் :  மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை !! 10-00 மணி முதல் 10-30 மணி வரை !! மதியம் : 01-00 மணி முதல் 03-00 மணி வரை !! இரவு : 08-00 மணி முதல் 11-00 மணி வரை !! இன்றைய சுப ஓரைகள் : சுக்கிர ஓரை

வில்வ துளசி ஆன்மீகம்

Image
*கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்ல:  ஒரு நாள் நான் முடிவு செய்தேன்  இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…  ஆம்,  எனது வேலை,  எனது உறவுகள்,  என் இறையாண்மை  அனைத்தையும் விட்டுவிடுவது  என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.  அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். “கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?” கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… “ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” “ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். “நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.  அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.  ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த

மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது மதுரை மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

Image
மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது மார்க். கம்யூ மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி மதுரை: மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதாக மதுரையில் நடந்து வரும் மார்க். கம்யூ மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேசினார். மார்க். கம்யூ தமிழ் மாநில 23 வது மாநாடு மதுரையில் நேற்று 30 ம் தேதி தொடங்கியது.  3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு மாநாட்டில் பேசியதாவது: பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச முடியவில்லை. மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது. அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. எதிரிகளை பயப்படுத்துவதற்காக அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் பெரிய முதலாளிகளுக்கு விற்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, வேலை இல்லாதது குறித்து மத்திய அரசு பேசுவதில்லை. புதிய கல்விக் கொள்கை மூலம் தங்களது கொள்கைகளை புகுத்துகிறார்கள். ரஷ்யா, உக்ரைன் போரினால், அமெரிக்க பல தில்லுமுல்லுகளை செய்து வருகிறது.  அமெரிக்காவின்  ஜ

மண்டல குழு தலைவர்கள் தேர்வு

Image
மண்டல குழு தலைவர்கள்  தேர்வு வேலுார் மாநகராட்சியில் மேயராக சுஜாதா, துணை மேயராக சுனில்குமார் உள்ளனர். 60 வார்டுகளில் உள்ள நான்கு மண்டல குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் ஒன்றாவது மண்டலத்திற்கு புஷ்பலதா, இரண்டாவது நரேந்திரன், மூன்றாவது யூசுப்கான், நான்காவது மண்டல தலைவராக வெங்கடேசன்  ஆகியார் மண்டல குழு தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். கமிஷனர் அசோக்குமார் தலைமையில் தேர்தல் நடந்தது. ஒன்றாவது மண்டலத்திற்கு தி.மு.க., வை சேர்ந்த புஷ்பலதா, நான்காவது மண்டலத்திற்கு தி.மு.க., வை சேர்ந்த வெங்கடேசன் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மூன்றாவது மண்டல குழு தலைவர் பதவிக்கு தி.மு.க., யூசுப்கானை எதிர்த்து அ.தி.மு.க., வை சேர்ந்த எழிலரசன் மனு தாக்கல் செய்தார். இதில் 11 ஓட்டுக்கள் பெற்று தி.மு.க., வேட்பாளர் யூசுப்கான் வெற்றி பெற்றார். இரண்டாவது மண்டல குழு தலைவர் பதவிக்கு அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தி.மு.க., வை சேர்ந்த சுரேந்திரனுக்கு எதிர்ப்பாக அக்கட்சியை சேர்ந்த ஆர்.பி., ஏழுமலை மனு தாக்கல் செய்தார். இதில், தி.மு.க., போட்டி வே

கதிர் ஆனந்த் எம்பி பேச்சு டெல்லியில்

Image
10 ஆண்டுகளாக கடல் நீருக்கடியில் தொல்லியல் ஆய்வுகள் நடந்ததா? பாராளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்பி கேள்வி பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் வேலுார் திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசியதாவது: இந்திய தொல்லியல் துறை கடந்த 10 ஆண்டுகளாக கடல் நீருக்கடியில் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லையா? அதன் விவரங்கள்,  பண்டைய தமிழ்நாட்டில் சங்க காலத்தை சேர்ந்த தொல்லியல் எச்சங்கள் பூம்புகார், கொற்கைக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதா? கடல் ஆய்வுப் பணிகளில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையுடன் இணைந்து பணியாற்ற இந்திய தொல்லியல் துறை விரும்புகிறதா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பினார். இத்றகு மத்திய அரசின் கலாச்சாரம், சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்து பூர்வமாக கொடுத்த பதில்: 1962 முதல் 1968 ம் ஆண்டு வரை பூம்புகாரில் அகழ்வாராய்ச்சிகள் இந்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்டது. கொற்கையில் அகழாய்வு தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு பழங்காலதடயங்கள் கண்டுபிடிப்புக்கள் வெளியிடப்பட்டன. மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய தொல்லியல் துறை செயல்பட்டு வருகி

பாலாறு கலந்தாய்வுக் கூட்டம்

Image
பாலாறு பெருவிழா கலந்தாய்வுக்கூட்டம் விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆம்பூர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:  அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா கலந்தாய்வுக்கூட்டம் ஏப். மாதம் 3 ம் தேதி காலை 11:30 மணிக்கு வேலுார் திருமலைக்கோடி நாராயணி மகாலில் நடைபெற உள்ளது. ஸ்ரீபுரம் சக்தி அம்மா தொடங்கி வைக்கிறார். அகில பாரதீய சந்நியாசிகள் சங்க பொருளாளர், மாநாடு ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா,  சிரவையாதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், அகில பாரதீய சந்நியாசிகள் சங்க பொதுச் செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் 2011 ம் ஆண்டு முதல் தமிழகத்ததில் உள்ள அனைத்து நதிகளும் உற்பத்தியாகும் மலையிலிருந்து கடலில் சங்கமமாகும் இடம் வரை தீர்த்த கலசங்களுடன் ரத யாத்திரை, பாத யாத்திரை செய்து, நதிகளை புனிதமாக வழிபட வேண்டும், புனித தீர்த்தத்தை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன

பிரியாணிக்காக தயாராகும் கத்திரிக்காய்

Image
 பிரியாணிக்காக தயாராகும் முள்ளுக்கத்திரிக்காய் வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே இலவம்பாடியில்,  சாகுபடியாகும் முள்ளுக்கத்திரிக்காய்  புகழ் பெற்றது. இதற்கு வேலுார் கத்திரிக்காய் என்ற பெயரும் உள்ளது. உண்மையில் அதில் முள் இருக்கும். கொஞ்சம் கவனக்குறைவாக தொட்டாலும் கையில் முள்  குத்தி ரத்தம் வரும் அளவுக்கு செய்து விடும். ஆனால் அதனுள் இருக்கும் சுவேயை தனி. இதில் சொத்தையும் இருக்கும். புழுவும் இருக்கும். சொத்தை அகற்றி விட்டு, புழுவை வெளியேற்றி மஞ்சள் கலந்த வென்னீரில் போட்டு கழுவி சமைப்பார்கள். இப்போது ஆர்கானிக் முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. ஆனால் சத்தமில்லாமல் இலவம்பாடி முள்ளுக் கத்திரிக்காய் மட்டும் இயற்கையான முறையில் விளைவிக்கப்படுகிறது. திருப்பத்துார் மாவட்டத்தில், ஆம்பூர், வாணியம்பாடி, உம்மராபாத், ஜாபராபாத், வேலுார் மாவட்டத்தில், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேல் விஷாரம், கீழ் விஷாரம், ஆற்காடு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டன், சிக்கன் பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள இலவம்பாடி முள்ளுக்கத்திரிக்காய் தேடிப்பிடித்து வாங்கி

ஒடுக்கத்தூர் புளி

Image
 விற்பனையை சந்தைப்படுத்த தெரியாமல் உள்ள ஒடுக்கத்துார் புளி உற்பத்தியாளர்கள் வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியை சேர்ந்தது ஒடுக்கத்துார். இதன் அருகில் ஜவ்வாது மலை தொடர்கள் உள்ளது. மலை அடிவாரத்தில் லட்சக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு ஒரு முறை காய்க்கும் புளியங்காய்கள் காய்க்கிறது. இதற்காக புளி மரங்களை பலர் ஏலம் எடுக்கின்றனர்.   ஜன., மாதம் மரத்தில் இருந்து புளியங்கொட்டைகளை உலுக்கி எடுத்து விற்பனை செய்கின்றனர். அவற்றை வாங்கிச் செல்லும் உற்பத்தியாளர்கள் அதிலிருந்து  புளியங்காய்களை பறித்து காய வைத்து  கொட்டை, புளி, விழுதுகளை தனியாக பிரித்தெடுக்கின்றனர். பின் அவற்றை சுத்தப்படுத்தி தனித்தனியாக விற்பனை செய்கின்றனர். புளியங்கொட்டையோடு சேர்ந்த புளி 10 கிலோ 100 ரூபாய்க்கும், கொட்டையை பிரித்து சுத்தம் செய்யப்பட்ட புளி ஒரு கூடை 800 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது.  ஒரு கூடையில் 10 கிலோ முதல் 15 கிலோ வரை புளி உள்ளது. ஜன மாதம் முதல் வாரம் தொடங்கும் இந்த பணிகள் முடிந்து மார்ச் மாதம் புளி விற்பனைக்கு கிடைக்கிறது. இதற்காக ஒடுக்கத்துாரில் புளிச்சந்தை தினமும் ந

செங்கோட்டையில் பறந்த முதல் தேசிய கொடி குடியாத்தத்தில் தயாரிப்பு

Image
சுதந்திரம் பெற்றவுடன் செங்கோட்டையில் பறந்த முதல் தேசிய கொடி குடியாத்தத்தில் தயாரிப்பு சுதந்திரம் பெற்றவுடன் டெல்லி செங்கோட்டையில் பட்டொலி வீசி பறந்த முதல் தேசிய கொடி வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது. நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்ற அதிகளவு கொடி தேவைப்பட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்களில் கொடி தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுாரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் இந்துஸ்தான் லுங்கி கம்பனி நடத்தி வந்தார். அவரும், அவரது மனைவி முனிரத்தினம் அம்மாளும் இணைந்து இரண்டு கோடி கொடியை கைத்தறியில் நெசவு செய்து  டெல்லிக்கு அனுப்பினார். அவர் தயாரித்து அனுப்பிய கொடிதான், செங்கோட்டையில் ஏற்ற தேர்வு செய்யப்பட்டது. 1947 ம் ஆண்டு ஆக., 15 ல் சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் முதல் தேசிய கொடியாக அது ஏற்றப்பட்டது. கொடியை சிறப்பாக தயாரித்ததற்காக நேரு பாராட்டி அனுப்பிய கடிதத்தை அவரது குடும்பத்தினர் இன்றளவும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகின்றனர்.

2 இ ட் ச ம் பனை மர விதைகள் விதைக்க திட்டம்

Image
இந்தாண்டு 2 லட்சம் பனைமர விதைகள் விதைக்க திட்டம் மண்ணும் மரமும் குழுவினர் அசத்தல் ராணிப்பேட்டையில் உள்ள மண்ணும், மரமும் குழுவினர் இந்தாண்டு 2 லட்சம் பனைமர விதைகள் விதைக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ராஜூ கூறினார். தமிழர்களின் உணவிலும், வாழ்க்கையிலும் இரண்டற கலந்த பனை மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலைமை நீடித்தால் வருங்காலத்தில் பனை மரத்தை படங்களில் தான் பார்க்க முடியும். இதை மீட்டெடுக்கும் முயற்சியில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பெல் நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றி வரும் ராஜூ, 58,  என்பவர் தலைமையில், மண்ணும் மரமும் என்ற  இயற்கை பாதுகாப்புக்குழு 2019  ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குறித்து மண்ணும் மரமும் குழுவின் தலைவர் ராஜூ அளித்த பேட்டி: மண்ணும், மரமும் குழுவில் பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் என 60 பேர் உள்ளனர். சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பனை விதைகள் கொள்முதல் செய்யப்படுகின்றது. உலக அளவில் 108 நாடுகளில் பனைமரம் வளரும் தன்மை கொண்டுள்ளது.  தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமான மரமாக உள்ளது.  3

செயின் திருட்டு தடுக்க முடியாமல் திணறல்

 செயின் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறும் போலீசார் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், கடந்த சில மாதங்களாக, நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் வரும் மர்ம நபர்கள் செயின் பறித்துச் செல்வது அதிகளவு நடந்து வருகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் செயின் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுார் மாவட்டம், காட்பாடி ஓட பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது. இருந்தாலும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. கடந்த மாதம் மட்டும் வேலுார் மாவட்டத்தில் 34 பேர், ராணிப்பேட்டை, 36, திருப்பத்துார் மாவட்டத்தில் 41 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக வழக்கு பதிவாகி உள்ளது. இதில் எவ்வளவு நகை பறிபோனது என தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.  நிறைய பெண்கள், வழக்கு விசாரணைக்காக அலைய வேண்டும் என்பதால் புகார் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இது குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இப்போது முக்கிய நகரங்களில் முக்கிய சாலைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் வைக்க

வேலூர் போக்குவரத்து நெரிசல் ஏன்

Image
 வேலுாரில் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போக்குவரத்து போலீசார் சாலை பணிகள் நடந்து வருவதால், வேலுாரில் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர். வேலுார் மாவட்டம், வேலுாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ் ஸ்டாண்டு மூன்றாக பிரிக்கப்பட்டு வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டு முன்புறம், மக்கான், பழைய பஸ் ஸ்டாண்டில் செயல்படுகிறது. வேலுாரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருவதால் நிறை  இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. சத்துவாச்சாரியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலுார்– காட்பாடி சாலை புதிய பாலாற்று பாலம் பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால் போக்குவரத்து அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. வேலுாரில் 50 ஆயிரம் ஆட்டோக்கள், ஒரு லட்சம் பைக்குகள், 20 ஆயிரம்  கார்கள் உள்ளன. அரசு, தனியார் பஸ்கள் 1,250, டவுன் பஸ்கள்

ஏர் ஹாரன்கள் ஒழிக்கப்படுமா

Image
 வாகனங்களில் காதை கிழிக்கும் ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா பொது மக்கள் எதிர் பார்ப்பு வாகனங்களில் காதை கிழிக்கும் ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா பொது மக்கள் எதிர் பார்க்கின்றனர். வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், நாளுக்கு நாள் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதனால்  பஸ், லாரி, ஆட்டோக்களில் காதை கிழிக்கும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் இசை வடிவிலான ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏர்ஹாரன்களினால் நடந்து செல்பவர்களும், பைக் ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது: அதிக சத்தம் ஏற்படுத்தும் ஒலி நம் காதருகே கேட்கும் போது அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மனிதன் காதுகளுக்கு குறிப்பிட்ட சப்பத்துக்கு மேல் ஒலியை கேட்டும்  திறன் இல்லை. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கூட இந்த ஒலி பாதிக்கும். அதிக ஒலியால் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க 90 டெசிபல் ஹாரன் ஒலிப்பான்களை பயன்படுத்த வேண்டும். இதற்கு மேல் பயன்படுத்தினால் இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஒலி

வாரியார் கதை

Image
கிருபானந்த வாரியார் வேலுார் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லுாரை சேர்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார். சமய சொற்பொழிவாளரான அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணை எண் 39, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 2021 ம் ஆண்டு பிப்., மாதம் 26 ம் தேதி படி தமிழக அரசு சார்பில் கிருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாளான ஆக., 25 ம் தேதி அரசு விழாவாக கொண்டாட அறிவித்து வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு: 25.8.1906 ம் ஆண்டு காங்கேயநல்லுாரில் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தார். தந்தை மலலையதாச பாகவதர், தாய் மாதுஸ்ரீ கனகவல்லி அம்மாள். 8 வயதிலேயே இவர் கவி பாடும் ஆற்றல் பெற்றார். 12 வயதில் பதினாராயிரம் பண்களை கற்று 18 வயதில் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்தார். 19 வயதில் அமிர்த லட்சுமி என்பவரை திருமணம் செய்தார். 23 வயது வயதில் சென்னை ஆனைகவுனியில் தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் 4 ஆண்டுகள் வீணை கற்றார். முருக பக்தரான இவர் தினமும் ஆன்மீக சொற்பொழிவாற்றி வந்தார். இவர்

கஞ்சா வியாபாரிகள் கைது

Image
வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கஞ்சா வியாபாரிகள் 6 பேர் கைது ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் கஞ்சா கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்கச் சென்ற போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து, கஞ்சா கும்பலை போலீசார் தேடி வந்தனர். அரக்கோணம் சித்தேரியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான குமரேசன், 22, தண்டலம் அரிதாஸ், 21, பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அஜீத், 23, வடமாம்பாக்கம் பிரபு, 24, ஆகியோரை துப்பாக்கி முனையில் போலீசார்  கைது செய்துது ஒன்னரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்டம், காட்பாடி போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மாநிலம், சித்துாரில் இருந்து வேலுார் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை சோதனை செய்து 20 கிலோ கஞ்சா, 335 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டனத்தை சேர்ந்த கிலோ ஜோகி ராஜூ, 37, கிலோ சுப்பராவ், 35, கிலோ கோபி, 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

வாங்க வாங்க ஏலகிரி மலைக்கு போங்க போங்க காரில்

Image
 ஏலகிரி மலையில் பயணிகள் குவிந்தனர் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை உள்ளது. சுற்றுலா தலமான ஏலகிரி மலை கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகு  திறக்கப்பட்டது. இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஏலகிரி மலை பற்றிய விவரம்: திருப்பத்துார்  மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் உள்ளது. ஆண்டு முழுவதும்  குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை, இதமான காற்று காணப்படுகிறது. மலையில் உள்ள அத்னாவூர், பொன்னேரி, நிலாவூர், மங்களம் என 14 கிராமங்களில் விவசாயம் செய்கின்றனர். 29. 2 சதுர கி.மீ., பரப்பளவு கொணடது. மக்கள் தொகை 14 ஆயிரம். மலையின் உயரம் 1048.5 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து. சீதோழ்ண நிலை கோடை காலம் 34 டிகிரி, குளிர் காலம் 11 டிகிரி. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளில் மலைக்கு வர வேண்டும். ஒவ்வொரு வளைவிலும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். பார்க்க வேண்டிய இடங்கள்: புங்கனுார் ஏரி படகு இல்லம் குழந்தைகள் பூங்கா முருகன் கோவில் அத்னாவூர், நிலாவூர் அரசு பழத்தோட்டம் புங்கனுார் ஏரி அரசு மூலிகை பண்ணை தொலை நோக்கு கருவி ஜ

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது இறந்தது கல்லறை உள்ளது வேலூரில் தான்

Image
 ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது, இறந்தது, கல்லறை உள்ளது வேலுாரில் தான் மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்கள் இலங்கை கண்டியில் ஆட்சி செய்து வந்தனர். கி.பி., 1739 ம் ஆண்டு முதல்  கி.பி., 1747 ம் ஆண்டு வரை விஜயராச சிங்கனும், கி.பி., 1747 ம் ஆண்டு முதல் கி.பி., 1782 ம் ஆண்டு வரை கீர்த்திராச சிங்கனும், கி.பி., 1782 ம் ஆண்டு முதல் கி.பி., 1798 ம் ஆண்டு வரை ராஜாதிராச சிங்கனும் ஆண்டனர். அதன் பின் விக்ரமராச சிங்கன் என்பவர் கி.பி., 1798 ம் ஆண்டு முதல் கி.பி., 1815 ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார்.  அவரை எப்படியாவது கப்பம் கட்ட வைக்க வேண்டும் என ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. அது முடியாததால், நான்கு முறை போர் தொடுத்தனர். மூன்று முறை ஆங்கிலேயர்களை விரட்டியடித்த விக்ரம ராச சிங்கனை நான்காவது முறை அவரது தளபதிகளின் ஒருவர் துரோக புத்தியால் தோல்வியடைய நேர்ந்தது. இதனால் கி.பி., 1816 ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ம் தேதி விக்ரமராச சிங்கனையும், பட்டத்து ராணி சாவித்திரி தேவி,  இரண்டாவது மனைவி ராஜலட்சுமி தேவி மற்றும் குடும்ப

தி மு மு க தலைவர் இக்பால் கொடுத்த புகார்

Image
திமுமுகழக மாநிலத்தலைவர் இக்பால் மனு திராவிட முஸ்லிம் முன்னேற்றக்கழக மாநில தலைவர் ஜிஎஸ். இக்பால் தலைமையிலான நிர்வாகிகள் வேலுார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தொழில வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றார். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதல் அமைச்சர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அவதுாறு பரப்பி வருகிறார். இது சமூக நீதிக்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே அண்ணாமலை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சாகசம்

Image
சாகச நிகழ்ச்சி ராணிப்பேட்டை முத்துக்கடையில் சுதந்திர தின விழா 75 ம் ஆண்டு அமுத பெருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கலைஞர்களின் தீ ஜூவாலை மற்றும் தீப்பந்து சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டார்.

கோரிக்கை

Image
பாலாறு ஏசி வெங்கடேசன் வாணியம்பாடி மாநில பொதுச்செயலாளர் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாநில தலைவர் தென்பெண்ணை பாலாறு பாசன விவசாயிகள் சங்கம்.  ஒருங்கிணைந்த வேலூர்(திருப்பத்தூர் ராணிப்பேட்டை வேலூர்) மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் அச்சுஊடகவியலார் காட்சி ஊடகவியலாளர் உள்ளிட்ட தோழமை கள் அனைவருக்கும் வணக்கத்துடன் விடுக்கும் வேண்டுகோள்!!!   தமிழக சட்டமன்றத்தில் பொது மற்றும் வேளாண்மை க்கான நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. பாராட்டதக்க அம்சங்கள்  பல மேற்படி அறிக்கையில் இருந்தாலும் நிறைகளோடு குறைகளும் இருப்பதை சுட்டிக் காட்டாமல் இருக்கமுடியாது.  குறிப்பாக மேற்படிநிதிநிலைஅறிக்கையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.  மேற்படிமூன்றுமாவட்டங்களின் முதன்மைநீராதாரமான பாலாற்றின் தொடர்நீர்வரத்துக்காக தீட்டப்பட்ட தென்பெண்ணை பாலாறு இணப்புத்திட்டம் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. முந்தைய ஆட்சியில் முதல்வராகவும் துணைமுதல்வரா

விழிப்புணர்வு போட்டி

Image
வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு போட்டிகள்  வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஓவியம், கட்டுரை பேச்சு ஆகிய  மாவட்ட அளவிலான  போட்டிகள் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்டரங்கில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி  தலைமையில் நடைபெற்றது.   மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, வரவேற்று பேசினார்.  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம்,  ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.உ.நி.பள்ளி, கரிகிரி தலைமையாசிரியர் கோ.பழநி, காங்கேயநல்லூர் தி.மு.சி.வா.அ.ஆ.மே.நி.பள்ளி, அ.ஜெயதேவரெட்டி, சைதாப்பேட்டை அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் டி.சண்முகம், தாதிரெட்டிப்பள்ளி அரசுயர் பள்ளி தலைமையாசிரியர் எம்.கேசவன், செம்பேடு அரசுயர் பள்ளி தலைமையாசிரயர் பிரேம்சாய்பாபா ஒடுகத்தூர் பள்ளி தலைமையாசிரியர் பிச்சை ஆகியோர் போட்டிகளை நடைத்தினர். நடுவர்கள் முதுகலை ஆசிரியர்கள் ஶ்ரீவெங்கடேஸ்வரா மேனிலைப்பள்ளி கே.க

பயிற்சி பெறும் போலீசாருக்கு முதலுதவி பயிற்சி

Image
*காவலர் பயிற்சிப் பள்ளியில்*  *பெண் பயிற்சி காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி* வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 276 புதிய பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏழு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது பயிற்சியின் ஒரு பகுதியாக முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது முதலுதவி பயிற்சி துவக்க விழாவிற்கு முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார் துணை முதல்வர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்  முதன்மை கவாத்து அலுவலர் பாலாஜி வரவேற்றுப் பேசினார்.  இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி ரெட் கிராஸ் அவைத் தலைவர் மற்றும் முதலுதவி பயிற்சியாளர் செ.நா.ஜனார்த்தனன் முதல் உதவி விரிவுரையாளர் புலவர் பெ.முருகேசன் முதலுதவி பயிற்சி பெற்ற வி.பழனி ஆகியோர் பயிற்சி அளித்தனர். முதன்மை சட்ட விரிவுரையாளர் கனிமொழி காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர் சீனிவாசன் யூத் ரெட் கிராஸ் தலைவர் ரமேஷ்குமார் ஜெயின் மருத்துவக் குழு தலைவர் டாக்டர் தீனபந்து செயற்குழு உறுப்பினர் எ.ஸ்ரீதரன் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த பயிற்சியில் முதல் உதவியாளர் செய்ய வே

வில்வ துளசி ஆன்மீகம்

Image
*ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.*  அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.  லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.  லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.  லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?  நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவ

இலக்கியத் திருவிழா

Image
 அன்புடன் கலந்து கொண்டு பயனடையலாம்.

நமது மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராஜமாணிக்கம் பேட்டி

Image
நமது மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ராஜமாணிக்கம் பேட்டி: மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது. இது குறித்து நமது மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ராஜமாணிக்கம் அளித்த சிறப்பு பேட்டி: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கை விட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 சதவீத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய பணமாக்கும் திட்டத்தை கை விட வேண்டும். எல்.ஐ.சி., யின் பங்குளை மத்திய அரசு விற்பனை செய்யக்கூடாது. இது போன்ற கோரிக்கைகளுக்காக மத்திய தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். எனவே மத்திய தொழிற் சங்க நிர்வாக

மார்க்.கம்யூ முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் பேட்டி

Image
 மார்க்., கம்யூ., முன்னாள் வேலுார் மாவட்ட செயலாளர் நாராயணன் பேட்டி: மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது. இது குறித்து மார்க். கம்யூ., முன்னாள் வேலுார் மாவட்ட செயலாளர் நாராயணன் அளித்த சிறப்பு பேட்டி:   பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கை விட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 சதவீத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய பணமாக்கும் திட்டத்தை கை விட வேண்டும். எல்.ஐ.சி., யின் பங்குளை மத்திய அரசு விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக, தனியாருக்கு எல்.ஐ.சி., யின் பங்குகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது. இது பொது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் பலவற்றுக்கும் பங்களித்துள்ள