முதல்வரை சந்திக்க தீர்மானம்
ஓய்வூதிய உயர்வு, இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி தமிழக முதல்வரை சந்திக்க முடிவு தமிழ்நாடு | ஓய்வூதியப் பத்திரிகையாளார்கள் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம் மதுரை மே 15 ஓய்வூதிய உயர்வு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்|ட 1 கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச் சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் மே 14 ம் தேதி செவ்வாய்க்கிழமை மதுரையிலுள்ள ஹோட்டல் டியூக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பி. ஆர். சுப்பிரமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் செயலாளர் எஸ். பழனியா பிள்ளை முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் சென்னை துரை கருணாநிதி, சேலம் ஜி.கே.ஸ்டாலின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். துணைச் செயலாளர் சென்னை ஆர். சந்திரசேகரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கோவை ஆர். மோகன் கனக குமார், மதுரை எஸ். மக்தூம் ஜஹான், புளிங்குடி எம். சாகுல் ஹமீது, சென்னை சங்கொலி மு. நெடுமாறன், கடலூர் நா. கெங்காதரன், நெல்லை பி. நெல்சன், முக்கூடல் மு. சந்திர சேகர், த