முடியும்
*💗இன்றைய சிந்தனை...* *இந்த உலகத்தை வெல்வதை விட.. உங்களை முதலில் வெல்லுங்கள்..!!* - ரெனே டெஸ்கார்ட்டஸ் "வேலைகள் குவிந்து கிடக்கு. நேரமேயில்லையே' என்கிற அங்கலாய்ப்பை அதிகம் கேட்டிருப்போம். ஏன், நாமே பேசியுமிருப்போம். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது எங்கேயும், எப்போதும், எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அப்புறம் யாருக்கு, எதற்குத்தான் இந்த அங்கலாய்ப்பு? துருக்கி நாட்டு கதை ஒன்றை சமீபத்தில் கேட்டேன். அந்நாட்டு மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்றானாம். வேட்டையாடுவதில் திளைத்துப் போன மன்னன் நேரம் கடந்து போனதையே கவனிக்கவில்லை. சூரியன் மறைந்து மாலை மங்கி இரவு ஆகிவிட்டதால், மன்னனால் அரண்மனைக்குத் திரும்ப முடியவில்லை. வழியில் இருந்த ஒரு நெசவாளரின் வீட்டில் மன்னன் தங்கினானாம். அந்த நெசவாளருக்கு தன் வீட்டிற்கு வந்து தங்கியிருப்பவர் நாட்டின் மன்னன் என்று தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என்று எண்ணியிருந்தான். அரசன் காலையில எழுந்தபோது, நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்து. ""அந்தக் கயிறு எதற்கு?'...