Posts

Showing posts from April, 2023

மாற்றம்

Image
4 மாவட்டங்களை சேர்ந்த 11 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் வேலுார் புகார்களின் எதிரொலியாக வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 11 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை வேலுார்  சரக டி.ஐ.ஜி., முத்துசாமி இன்று பிறப்பித்தார். அன்படி திருப்பத்துார் மாவட்டம்,  வாணியம்பாடி மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வாணியம்பாடி கலால் இன்ஸ்பெக்டராகவும்,  நாட்றம்பள்ளி சாந்தி வாணியம்பாடி மகளிருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கலால் இன்ஸ்பெக்டர் மலர் திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி ஸ்டேஷனுக்கும்,  வாணியம்பாடி  கலால் இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆம்பூர் மகளிருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ராணி காட்பாடி மகளிர் ஸ்டேஷனுக்கும், திருவண்ணமலை மாவட்டம், ஆரணி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் திருவண்ணாமலை மாவட்டம், கடலாடிக்கும்,  இங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ராணிப்பேட்டை மாவட்டம்,  பாணாவரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். வேலுார் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகின் ராணிப்பேட்டை மக

விழா

மன் கி பாத் 200 வது பகுதி வேலுார்: பிரதமர் மோடியில் மன் கி பாத் நிகழ்ச்சி ரோடியோ மூலம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதன் 100  வது பகுதி இன்று ஒலிபரபரப்பப்பட்டது. பொது மக்கள் இதை கேட்கும் விதமாக வேலுார் மாவட்ட பா.ஜ., சார்பில்  500 இடங்களில் ரேடியோ வைத்து ஒலிபரப்பப்பட்டது. வேலுார் கோட்டை பூங்கா, விருதம்பட்டு துார்தர்சன் அலுவலகம், சத்துவாச்சாரி கங்கையம்மன் கோவில் அருகில், வள்ளலார், கழிஞ்சூர், பாகாயம், சாய்நாதபுரம், வேலப்பாடி ஆகிய இடங்களில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி  தொடங்கி  வைத்தார். பா.ஜ., நிர்வாகிகள் கவுன்சிலர் சுமதி, இளங்கோவன், பாபு, ஜெகன், பிச்சாண்டி, மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சஸ்பெண்ட்

Image
சஸ்பெண்ட் வேலுார்: வேலுார் காகிதப்பட்டறையில் அரசு சிறுவர் இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 42 சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் 27 ம் தேதி முதல் இந்த மாதம் 27 வரை ம் தேதி வரை 18 சிறுவர்கள் தப்பிச்சென்றனர். இதில் 11 பேர் பிடிபட்டனர். ஒருவர் சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். மீதமுள்ள 6 பேரை தனிப்படையினர் தேடி  வருகின்றனர். இந்நிலையில் இந்த பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் விஜய்குமார் கடலுார் பாதுகாப்பு இல்லத்திற்கு நேற்று மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த கணபதி வேலுார் பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டார். வேலுார் பாதுகாப்பு இல்ல பாதுகாவலர் துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பிறப்பித்தார். கள் விற்பனை அமோகம் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஆற்காடு, கலவை,  திமிரி,  தாமரைப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெய்யிலின்  தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஆந்திரா மாநிலம், சித்துாரில் இருந்து  கடத்திவரப்பட்டும் கள் இப்பகுதியில் அமோகமாக  விற்பனை செய்யப்படுகிறது. ஒ

இடமாற்றம்

Image
4 மாவட்டங்களை சேர்ந்த 11 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் வேலுார  வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 11 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை வேலுார்  சரக டி.ஐ.ஜி., முத்துசாமி இன்று பிறப்பித்தார். அன்படி திருப்பத்துார் மாவட்டம்,  வாணியம்பாடி மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வாணியம்பாடி கலால் இன்ஸ்பெக்டராகவும்,  நாட்றம்பள்ளி சாந்தி வாணியம்பாடி மகளிருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கலால் இன்ஸ்பெக்டர் மலர் திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி ஸ்டேஷனுக்கும்,  வாணியம்பாடி  கலால் இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆம்பூர் மகளிருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ராணி காட்பாடி மகளிர் ஸ்டேஷனுக்கும், திருவண்ணமலை மாவட்டம், ஆரணி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் திருவண்ணாமலை மாவட்டம், கடலாடிக்கும்,  இங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ராணிப்பேட்டை மாவட்டம்,  பாணா

தற்கொலை

Image
🔸  *திருப்பத்தூர் மாவட்டம்* *திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த இன்பராஜ் என்ற காவலர் 3 நாட்களாக விடுப்பிலிருந்து அவர் ஜோலார்பேட்டை அருகே பாச்சல்  பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்*

தற்கொலை

Image
காட்பாடியில்  பெற்றோருடன் தகராறில்  வாலிபர் தீக்குளித்து சாவு காட்பாடி செங்குட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சார்ஜ் ஓய்வு பெற்ற துப்புரவு ஊழியர்.இவருடைய மனைவி மெர்சி.காட்பாடி வேளாண்மை அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய  மகன் சாம் ரிச்சர்ட் (வயது 31).மாற்றுத்திறனாளியான இவர் தனது பெற்றோரிடம் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சாம்ரிச்சர்ட் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார்.இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ... அபாய சங்கிலியை இழுத்ததால்  கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் நடு வழியில் நிறுத்தம் சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 7.45 மணிக்கு காட்பாடி அருகே உள்ள முகுந்தராயபுரம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டி 9 முன்பதிவு பெட்டியில் அபாய சங்கலியை பிடி

திறப்பு

Image
மாண்புமிகு *புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர்*  மற்றும் *புரட்சித்தலைவி அம்மா* அவர்களின் அருளாசியுடன். 🙏  மாண்புமிகு கழக பொது செயலாளர் *அண்ணன் எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க..✌️ *வேலூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நீர்மோர்- தண்ணீர் பந்தல் திறப்பு விழா*.. வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் *திரு.S.R.K. அப்பு* அவர்கள் மற்றும் வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் *திரு.ஜனனீ P. சதீஷ்குமார்* ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர் இடம் : அம்மா உணவகம் அருகில், (ராஜா தியேட்டர் எதிரில்) வேலூர், நாள் : 28/04/2023 காலை : 10.20 மணி..🙏 நிகழ்ச்சி ஏற்பாடு: *V.L.ராஜன், B.E, M.S, L.L.B* மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மாநகர் மாவட்டம்..

தற்கொலை

Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்த ரகு மகள் அனுப்பிரியா  வயது (26) சென்னையில் ஓரு ஐடி கம்பெனியில் பணி புரிந்து கொண்டு வங்கி தேர்வு எழுதி  உள்ளார் இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சி ராமர் கோவில் தெருவை சேர்ந்த சிவமூர்த்தி மகன் திருமுருகன் வயது (26) இருவரும் வங்கி தேர்வு எழுதும் போது பழக்கம் ஏற்பட்ட இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர் இந்த நிலையில்  கடந்த 21 நாட்களுக்கு முன்பு இருவரும் ஓரு கோவில் ரகசிய திருமணம் செய்து கணவன் மனைவி இருவரும் மின்னூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர் நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மனமுடைந்த அனுபிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் திருமணம் ஆகி 21 ஆனதால் வாணியம்பாடி கோட்டாட

பயிலரங்கம்

Image
Date:22.04.2023 *ஆசிரியர் கூட்டணியின் இயக்கப் பயிலரங்கம்* &&&&&&&& தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்கப் பொறுப்பாளர்களுக்காக இரண்டு நாள் பயிலரங்கம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள அரிமா சங்க நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரஞ்சன் தயாளதாஸ் தலைமை தாங்கினார்.   மாநில செயலாளர் டேவிட் ராஜன் முன்னிலை வகித்தார்.  திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் நல்.ஞானசேகரன் வரவேற்றுப் பேசினார். இப்பயிலரங்கினை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் மு.மணிமேகலை பொதுச்செயலாளர் ச.மயில் பொருளாளர் ஜெ.மத்தேயு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.    மாநிலத்துணைத்தலைவர்கள் பெ.அலோசியஸ் துரைராஜ், நா.அமுதவல்லி, மாவட்ட செயலாளர்கள் பி.செ.அமர்நாத்,(இராணிப்பேட்டை) மு.சத்தியநாதன் (சென்னை), எ.அந்தோணிராஜ், வேலூர் மாவட்ட செயலாளர் ஆ.சீனிவாசன் ஆகியோர் பல்வேறு அமர்வுகளுக்கு தலை

சான்றிதழ் வழங்கும் விழா

Image
நாள்.30.04.2023 *ரெட்கிராஸ் சார்பில் ஜெஆர்சி மாணவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் ட்டீடா சரவணன் சான்றிதழ் வழங்கினார்* --------------------------------------- காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் ஜுனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 30.04.2023 காலை 9.30 மணி அளவில் காட்பாடி அருப்புமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறது.  இவ்விழாவிற்கு வேலூர் மாநகராட்சியின் வேலூர் மாநகராட்சியின் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீடா.சரவணன் பங்கேற்று கல்வியாண்டில் சிறந்த சேவை புரிந்தமைக்காக சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.  அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்றுப் பேசினார்.  தொழிற்கல்வி ஆசிரியர் சச்சிதானந்தம், அவை துணைத் தலைவர்கள் ஆர்.விஜயகுமாரி, ஆர்.சீனிவாசன், ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்  டி.வேணுகோபால், ஶ்ரீரஞ்சனி, தலைமை ஆசிரியர் பழனி, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வேதக்கண் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாண்மை குழு உறுப்பினர்கள் கண் மருத்துவர் டாக்டர் தீனபந்து ஓய்வு பெற்ற ராணு

கோரிக்கை

Image
குடியாத்தம் அருகே மலைபோல உயரமான வேகத்தடையை அகற்றி சாதாரண சாலையாக மாற்றித் தர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  வேலூர் மாவட்டம், குடியாத்தம்  தாலுகா, கூடநகரம் கிராமத்திலுள்ள மாங்கனி நகர் பகுதியிலுள்ள சாலைகளில் மலைபோல் மிக ஆபத்தாக உள்ள வேகத்தடைகளை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண சாலையாக உடனடியாக மாற்றி தரவேண்டி கோரிக்கை... அவசரத்திற்கு ஆட்டோ வரமுடியவில்லை, மருத்துவத்திற்கு ஆம்புலன்ஸ் வரமுடியவில்லை மற்றும் திருவிழா காலங்களில் சுவாமி தேர் இழுத்து வர முடியவில்லை, சிறிய சைக்கிள் ஓட்டும் குழந்தைகள் அடிக்கடி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எங்கள் ஊரிலுள்ள விசித்திரமான இந்த ஏழு மலைப்போல் உயரமாகவம் ஆபத்தாகவும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள வேகத்தடைகளை அகற்றிசாதாரண சாலையாக மாற்றித் தர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

குற்றச்சாட்டு

Image
வேலூர்      சத்துவாச்சாரியில் சங்கிலி தொடர் வணிகத்தில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தில் பொதுமக்கள் பொருட்கள் வழங்க வேண்டும் அல்லது பணத்தை திருப்பி தர வேண்டுமென கேட்டதால் பொதுமக்கள் மீது தாக்குதல் இருவர் மருத்துவமனையில் அனுமதி காவல்துறை மோசடி நிறுவனத்திற்கு சாதமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு  ________________________________________________________          வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் டிரான்ஸ் இந்தியா கார்பரேஷன் நெட் ஒர்க் லிமிடெட் ( சங்கிலி தொடர் வணிகம்) செயின் லிங்க் நடைபெற்று வருகிறது இதில் நிறுவனத்தின் மேலாளராக இருப்பவர் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் அலுமேலுரங்காபுரத்தை சேர்ந்த வித்யா என்பவரும் ஒடுக்கத்தூரை சேர்ந்த சோனா என்பவரும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் இதில் ஹெல்த் கேர் பியூட்டி கேர் பொருட்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் ரூ.9300 வசூல் செய்து அவர்கள் மூல்ம் ஒவ்வொரு நபரும் 10 முதல் 20 பேர் வரையில் சேர்த்து ஆயிரக்கணக்கான நபர்களிடம் செயின் லிங்க் மூலம் பணம் வ்சூல் செய்துள்ளனர் ஆனா

மெமோ

Image
திருப்பத்துார் அருகே 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் தலைமை ஆசிரியருக்கு மெமொ திருப்பத்துார், ஏப்.  கந்திலி அருகே சண்டையிட்டுக்கொண்ட இரண்டு  ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே குனிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம் 29 ல் பள்ளி  கால அட்டவணை தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பள்ளியில்  நடந்தது. தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, 55, தலைமை வகித்தார். அப்போது, வேதியியல் ஆசிரியர் சின்னமணி, 45, இயற்பியல் ஆசிரியர் கோவிந்தசாமி, 43,  ஆகியோருக்கிடையே கால அட்டவணை தயாரிப்பதில் வாக்கு வாதம் ஏற்பட்டு, ஆபாசமாக  திட்டிக்கொண்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அரை மணி நேரம் நடந்த சண்டை குறித்து கடந்த வாரம் சமூக வளைதலங்களில் வைரலாக பரவியது. மாவட்ட முதல்மை கல்வி அலுவலர் மதன்குமார் விசாரணை நடத்தி ஆசிரியர்கள் சின்னமணி, கோவிந்தசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் குழந்தைசாமிக்கு  மெமே

பலி

Image
மாடு முட்டி தொழிலாளி உயிரிழப்பு திருப்பத்துார், ஏப்.  ஆலங்காயம் அருகே, மாடு முட்டி தொழிலாளி இறந்தார். திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அருகே உமையப்பநாயக்கனுார் கிராமத்தில் கடந்த 11 ல் மாடு விடும் விழா நடந்தது. இதில் 250 மாடுகள் பங்கேற்றன. 3 ஆயிரம் பேர் விழாவை பார்த்தனர். அப்போது பீமகுளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல், 27, என்பவரை மாடு முட்டியது.  படுகாயமடைந்த அவரை வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று  (12) நள்ளிரவு 12:00 மணிக்கு இறந்தார். ஆலங்காயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கைது

Image
குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை கைது திருப்பத்துார், ஏப்.  கந்திலி அருகே, குழந்தைக்கு  விஷம் கொடுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது  செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே கிழக்கு பதனவாடி  கிராமத்தை சேர்ந்தவர், சிவக்குமார்,  30. விவசாயி. இவர் மனைவி, சத்யா, 27. இவர்களுக்கு அக்‌ஷா, 5, இலக்கியா, 3, மித்ரா, 1 என மூன்று மகள்கள் உள்ளனர். சிவக்குமார்  சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்து விட்டு வந்ததால், அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில்  மூத்த மகள் அக்‌ஷாவை அழைத்துக்கொண்டு ஜல்லியூரில் உள்ள தாய் வீட்டிற்கு சத்யா சென்று விட்டார். விரக்தியடைந்த சிவக்குமார்  கடந்த 8 ம் தேதி   பாலில் விஷம் கலந்து கொடுத்து மித்ராவை கொலை செய்தார்.  இரண்டாவது குழந்தை இலக்கியாவிற்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, அவரும் விஷம் குடித்தார். உறவினர்கள் அவர்களை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில் அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர்.  கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை இன்று கைது  செய்தனர்.

கைது

Image
அனுமதியின்றி மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கி, மான் கொம்பு பறிமுதல் தொழிலாளி கைது திருப்பத்துார், ஏப். ஆண்டியப்பனுார் மலையில், அனுமதியின்றி வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கி, மான் கொம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆண்டியப்பனுார் மலையில், திருப்பத்துார் வனத்துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதில் இருளப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 32, என்ற மரம் வெட்டும் தொழிலாளி வீட்டில்  இரண்டு நாட்டு துப்பாக்கிகள், இருண்டு புள்ளி மான் கொம்புகள், பறவைகளை பிடிக்கும் கம்பி வலைகள், கத்தி, துப்பாக்கிக்கு பன்படுத்தும் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்ததும்,  வன விலங்குகளை வேட்டைடுபவர்களுக்கு அந்த பொருட்களை வாடகைக்கு விட்டு வருவது தெரியவந்தது. வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை  கைது  செய்து, நாட்டு துப்பாக்கி போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தர்ணா

Image
ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா ஆற்காடு, ஏப்.  ஊராட்சி செயலாளரை நியமிக்கக் கோரி, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் ஆற்காட்டில் தர்ணா போராட்டம் நடத்தினர். ராணிப்பேட்டை  மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பூட்டுத்தாக்கு கிராம ஊராட்சியில் தலைவராக அருண் உள்ளார். கடந்த ஆறு மாதமாக ஊராட்சி செயலாளர் பதவி காலியாக உள்ளது. இதனால் வரி வசூல் மற்ற திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளரை நியமிக்கக்கோரி கடிதம் அனுப்பியும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஊராட்சி தலைவர் அருண் தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் இன்று  காலை  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு  தலைவர்  புவனேஸ்வரி பேச்சு வார்த்தை நடத்தி, விரையில் ஊராட்சிp செயலாளரை நியமித்ததாக உறுதியளித்ததன்பேரில் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கைது

Image
ஆந்திரா மாநிலத்திற்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது திருப்பத்துார், ஏப். 13– திருப்பத்துார் அருகே, ஆந்திரா மாநிலத்திற்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.. ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று, திருப்பத்துார் அருகே, கொத்துார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை சோதனை  செய்ததில், ஒரு டன் ரேஷன் அரிசி  இருந்தது. விசாரணையில், நாட்றம்பள்ளியை சேர்ந்த டிரைவர்கள் ஏழுமலை, 36, சந்தோஷ், 33, ஆகியோர் ஆந்திரா மாநிலம், குப்பத்திற்கு ரேஷன் அரிசியை  கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார்  அவர்களை  கைது செய்து, காருடன் சேர்த்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

நல்ல நேரம்

Image
🚩  *காலை தரிசனம் !*  *கால பைரவர் தரிசனம் !!* "கோள் நிலை திரிந்திடின் மாரி வறங்கூறும்,  மாரி வறங்கூறின் மண்ணுயிர் இல்லை......!  (மணிமேகலை) வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்...... அடியார் அவர்க்கு மிகவே...!   (தேவாரம்) வெவ்வினை தூள்எழ வீறுடன் அடியவர் வாழ இறைவன் கொண்ட கோலம் பைரவர் கோலம்.....! விரித்தபல் கதிர்கொள் சூலம் செந்நெறிச் செல்வ னாரே........!!" (தேவாரம்) சுப கிருது வருடம் :  பங்குனி மாதம் 30 ஆம் நாள் ! ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி ! (13-04-2023)  வியாழக்கிழமை !! இன்றைய திதி : தேய்பிறை :  அஷ்டமி !! அஷ்டமி.. இரவு 12-30 மணி வரை,அதன்பிறகு  நவமி !! இன்றைய நட்சத்திரம் :  பூராடம்.. காலை 09-45 மணிவரை ! அதன்பிறகு உத்திராடம் !! யோகம் : நன்றாக இல்லை  !! இன்று கீழ் நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்று மாலை 03-15 மணி வரை ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் ! அதன்பிறகு.. மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! எமகண்டம் :  காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !! குளிகை :   காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! சூலம் : தெற்கு ! பரிகாரம் :

ஆர்பாட்டம்

Image
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஆகிய இரு ஊராட்சிகள் உள்ளது. இந்த இரு ஊராட்சிகளுக்கிடையே எல்லை மறு வரையறை தொடர்பான கடந்த சில மாதங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும், இந்த ஊராட்சிகளுக்கிடையே உள்ள காஞ்சனகிரி மலை சிவன் கோயிலை நிர்வாகம் செய்வதிலும் இரு தரப்பினருக்கிடையே, பிரச்சனை நீடித்து வருகிறது. எல்லை மற்றும் கோயில் பிரச்சனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதற்கிடையே, காஞ்சனகிரி மலைக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை ஒப்படைக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்து முன்னணியினர் மற்றும் லாலாப்பேட்டை கிராம மக்கள், சிவபக்தர்கள்  சார்பில் திருவாசகம், சிவப்புாரணம் பாடல்களை பாடி நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு, கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர்கள் ஜெகன், மோகன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வு

Image
♻️இன்று 11.04.2023-ம் தேதி வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  வேலூர் சரக  காவல்துறை துணைத் தலைவர்  முனைவர் M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ராஜேஸ் கண்ணன்., இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து Beat Patrol Vehicle, Women Helpdesk Vehicle , Traffic Marshal Vehicle இருசக்கர வாகனங்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இவ் வாகனங்களில்  பழுதுகள் நீக்கப்படும் புதிதாக ஒலிபெருக்கி (PA System), மின்மினு விளக்குகள் (Blinkering light), எச்சரிக்கை ஒலிப்பான் (siren) பொருத்தப்படும். ரோந்து செல்லும் காவலர்கள் கூட்ட நெரிசலை சீர் செய்யவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் போக்குவரத்து சீர் செய்யவும் சம்பந்தப்பட்ட காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார்.  ♻️ இதனைத் தொடர்ந்து புதிதாக தயார் செய்யப்பட்டுள்ள 485 தடுப்பான்கள் (Barricades) முதல் கட்டமாக, 80  தடுப்பான்கள் (Barricades) மற்றும் 300 கூம்புகள் (Traffic cones) காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. P.

யானை

Image
வேலூர்    12-4-23 யானை தாக்கியதில் பெண் படுகாயம்-  கவலைக்கிடமான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை  ______________________________     வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோகிலா ( 51) வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது  யானை நிலத்தில் இருந்துள்ளது யானையிடமிருந்து தப்பி கோகிலா ஓடியுள்ளார் இருப்பினும் யானை அவரை துரத்தி  தாக்கியதில் கோகிலா படுகாயம் அடைந்து  சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதுகில் உள்ளது அனைத்து எலும்புகளும் யானை தாக்கியதில் உடைந்து தூளானதால் மேல் சிகிச்சைக்காக கவலைக்கிடமான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் பெண்ணை யானை தாக்கிய  சம்பவம் குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்      கடந்த சில மாதங்களாகவே யானைகள் தொடர்ந்து பேர்ணாம்பட்டு கிராம பகுதிகளில் வந்து விவசாயிகளின் விளைபயிர்களை நாசம் செய்வதுடன் ஆட்களை தாக்கி காயப்ப

நேரம்

Image
🚩  *காலை தரிசனம் !*  *செவ்வாய் ஸ்தலம் உஜ்ஜைனி மங்களநாதர் தரிசனம் !!* சுப கிருது வருடம் :  பங்குனி மாதம் 28 ஆம் நாள் ! ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ! (11-04-2023)  சோம வாரம் !! சூரிய உதயம் :  காலை : 06-28 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-26 மணி அளவில் இன்றைய திதி : தேய்பிறை :  சஷ்டி !! பஞ்சமி.. காலை 07-00 மணி வரை ! அதன்பிறகு  சஷ்டி !! இன்றைய நட்சத்திரம் :  கேட்டை.. மதியம் 12-30 மணிவரை ! அதன்பிறகு மூலம் !! யோகம் :  சித்தயோகம் ! அமிர்தயோகம் !! இன்று சம நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்று மேஷ ராசிக்கு மதியம் 12-30 மணி வரை சந்திராஷ்டமம் ! அதன்பிறகு... ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !! ராகுகாலம் :  மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! எமகண்டம் :  காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! குளிகை :   மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! சூலம் :  வடக்கு ! பரிகாரம் : பால் !! கரணம் :  காலை: 07-30 மணி முதல் 09-00 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  08-00 மணி முதல் 09-00 மணி வரை ! மதியம் :  12-00 மணி முதல் 01-00 மணி வரை ! இரவு : 07-00 மணி முதல் 08-00 மணி வரை ! இன்றைய சுப ஓரைகள்

நல்ல நேரம்

Image
🚩  *காலை தரிசனம் !*  *பெருமாள் தரிசனம் !!* சுப கிருது வருடம் :  பங்குனி மாதம் 29 ஆம் நாள் ! ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி ! (12-04-2023)  புதன்கிழமை !! இன்றைய திதி : தேய்பிறை :  ஸப்தமி !! ஸப்தமி.. பின் இரவு 02-45 மணி வரை,அதன்பிறகு  அஸ்டமி  !! இன்றைய நட்சத்திரம் :  மூலம்.. காலை 11-15 மணிவரை ! அதன்பிறகு  ஆயில்யம் !! யோகம் : நன்றாக இல்லை  !! இன்று கீழ் நோக்கு நாள் ! சந்திராஷ்டமம் : இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் :  மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! எமகண்டம் :  காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! குளிகை :   மதியம் : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! சூலம் :  வடக்கு ! பரிகாரம் : பால் !! கரணம் :  காலை: 06-00 மணி முதல் 07-30 மணி வரை ! நல்ல நேரம் :  காலை :  06-00 மணி முதல் 07-00 மணி வரை ! 09-00 மணி முதல் 10-00 மணி வரை ! மாலை :  04-00 மணி முதல் 05-00 மணி வரை ! இரவு : 07-00 மணி முதல் 09-00 மணி வரை ! இன்றைய சுப ஓரைகள் : புதன் ஓரை :  காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை !! குரு ஓரை :  காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !! இன்றைய சிறப்புகள் : ஏதுமில்லை ! இன்று  வழ

விழிப்புணர்வு

Image
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, இன்று (12/04/2023) வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  AAA கல்லூரி மாணவ மாணவர்களுக்கு கஞ்சா / குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு  குறித்த Women helpline Number 181, மற்றும் Cyber crime Helpline number 1930 பற்றிய  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.   மேலும் வாலாஜா Toll Plaza  பகுதியில் பொது மக்களுக்கு, போக்குவரத்து பாதுகாப்பு குறித்தும்  ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

காயம்

Image
யானை தாக்கி பெண் படுகாயம் பேர்ணாம்பட்டு, ஏப். 13– பேர்ணாம்பட்டு அருகே, யானை தாக்கி படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோகிலா, 51. இவருக்கு சொந்தமான நிலம்  எருக்கம்பட்டு வனப்பகுதியையொட்டி உள்ளது. இன்று காலை  தண்ணீர் பாய்ச்ச கோகிலா நிலத்திற்கு சென்ற போது அங்கிருந்த யானை ஒன்று விரட்டிச் சென்று மிதித்து  தாக்கியது. இதில் அவரது அனைத்து எலும்புகளும் உடைத்து துாளானது. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேர்ணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

உத்தரவு

Image
 போலீஸ் ஸ்டேஷன்களில் பஞ்சாயத்து  செய்யக்கூடாது டி.ஐ.ஜி., உத்தரவு வேலுார், ஏப். 13– போலீஸ் ஸ்டேஷன்களில் விபத்து குறித்து வழக்கு பதிவு  செய்யாமல், பேரம் பேசி பஞ்சாயத்து  செய்யக்கூடாது என வேலுார் டி.ஐ.ஜி.,  முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை  தீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. வேலுார் மாவட்ட எஸ்.பி.,  ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களின் மீது வேலுார் சரக டி.ஐ.ஜி., முத்துசாமி  விசாரணை நடத்தினார். அப்போது, பொன்னை  கீரச்சாத்து பகுதியை சேர்ந்த ஒருவர் நிலப்பிரச்சனை குறித்து 100 முறை பொன்னை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி., முத்துசாமி உத்தரவிட்டார். வேலுாரை சேர்ந்த அசேன் என்பவர் கொடுத்த மனுவில் முன்பு நான் கஞ்சா வியாபாரி, இப்போது மனம் திருந்தி வாழ்கிறேன். போலீசார் என் மீது கஞ்சா வழக்கு போட திட்டமிட்டுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார். இவர் மீது எந்த வழக்கும் போடக்கூடாது, ஆனால்  கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது

பலி

Image
பைக்குகள் மோதல் 2 பேர் பலி வாணியம்பாடி, ஏப். 13– வாணியம்பாடி அருகே, பைக்குகள் மோதி இரண்டு பேர் பலியாகினர். திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் முகமது அர்ஷத், 30. இவர் திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஆரிப் அகமத், 29, என்பவருடன் நேற்று   (11 ) இரவு 12:00 மணிக்கு வாணியம்பாடி அருகே நெக்குந்திக்கு பல்சர் பைக்கில் சென்று டீ குடித்து விட்டு வாணியம்பாடிக்கு வந்து கொண்டிருந்தார். செட்டியப்பனுார் கூட்டுசாலைக்கு  வந்த போது எதிரே யமாகா பைக்கில் வந்த 35 வயதுள்ள நபர் ஓட்டி வந்த பைக் பல்சர் பைக் மீது மோதியது. இதில் சம்பவம் நடந்த இடத்தில் முகமது அர்ஷப் இறந்தார். படுகாயமடைந்த இருவரை போலீசார் மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் 35 வயதுள்ள வாலிபர் இன்று மதியம் 1:00 மணிக்கு  இறந்தார். ஆரிப் அகமதுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த 35 வயதுள்ளவர் குறித்து விசாரிக்கின்றனர்.

பலி

Image
கிணற்றில் விழுந்து 2 மான்கள் பலி வேலுார், ஏப். 13– ஒடுக்கத்துார் அருகே, கிணற்றில் விழுந்து இரண்டு மான்கள் இறந்தன. வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அருகே உள்ள சேர்ப்பாடி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் இரண்டு மான்கள் விழுந்து இறந்து கிடந்தது குறித்து அப்பகுதி மக்கள் இன்று காலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஒடுக்கத்துார் வனத்துறையினர் இரண்டு மான்கள் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், ஒடுக்கத்துார் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த மான்கள் இரண்டும் தவறி கிணற்றில் விழுந்து இறந்தது தெரியவந்தது. 

ஆர்பாட்டம்

Image
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஆகிய இரு ஊராட்சிகள் உள்ளது. இந்த இரு ஊராட்சிகளுக்கிடையே எல்லை மறு வரையறை தொடர்பான கடந்த சில மாதங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும், இந்த ஊராட்சிகளுக்கிடையே உள்ள காஞ்சனகிரி மலை சிவன் கோயிலை நிர்வாகம் செய்வதிலும் இரு தரப்பினருக்கிடையே, பிரச்சனை நீடித்து வருகிறது. எல்லை மற்றும் கோயில் பிரச்சனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதற்கிடையே, காஞ்சனகிரி மலைக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை ஒப்படைக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்து முன்னணியினர் மற்றும் லாலாப்பேட்டை கிராம மக்கள், சிவபக்தர்கள்  சார்பில் திருவாசகம், சிவப்புாரணம் பாடல்களை பாடி நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு, கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர்கள் ஜெகன், மோகன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெரியுமா

Image
தினம் ஒரு மருந்து 🌿 வெரிகோஸ் வெயினை குணமாக்கும் மருத்துவ தீர்வுகள்: 🔹️ குப்பைமேனி, வில்வம், நெருஞ்சில், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை அரைத்து நரம்புச்சுருட்டல் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். 🔹️ மஞ்சள், துளசி, வசம்பு, சோற்றுக் கற்றாழை ஜெல் ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து, அதை தொடர்ந்து 2 அல்லது 3 வாரங்கள் நரம்புச் சுருட்டலுக்கு மேல் தடவி வர, நரம்புச்சுருட்டல் வலி குறையும். 🔹️ புங்க எண்ணெய் அல்லது புங்கன்கொட்டை, விளக்கெண்ணெய் மற்றும் தேன் ஆகிய அனைத்தையும் கலந்து, 2 அல்லது 3 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். 🔹️ தினமும் அத்திப்பாலை நரம்புச்சுருட்டல்களுக்கு மேல் தடவி வந்தால், வலி குறைந்து நல்ல பலன் கிடைக்கும். 🔹️ தண்ணீர்விட்டான் கிழங்குகளை நன்கு இடித்து அதன் சாறு எடுத்து அதை தினமும் குடித்து வந்தால், நரம்புச்சுருட்டல் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

வாழ்த்து

Image

மருந்து

Image