Posts

Showing posts from May, 2023

அரசு படம்

Image

தாக்கல்

Image
வேலூர்    12-4-23 யானை தாக்கியதில் பெண் படுகாயம்-  கவலைக்கிடமான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை  ______________________________     வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோகிலா ( 51) வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது  யானை நிலத்தில் இருந்துள்ளது யானையிடமிருந்து தப்பி கோகிலா ஓடியுள்ளார் இருப்பினும் யானை அவரை துரத்தி  தாக்கியதில் கோகிலா படுகாயம் அடைந்து  சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதுகில் உள்ளது அனைத்து எலும்புகளும் யானை தாக்கியதில் உடைந்து தூளானதால் மேல் சிகிச்சைக்காக கவலைக்கிடமான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் பெண்ணை யானை தாக்கிய  சம்பவம் குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்      கடந்த சில மாதங்களாகவே யானைகள் தொடர்ந்து பேர்ணாம்பட்டு கிராம பகுதிகளி

ஆலோசனை கூட்டம்

Image
அண்ணாநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம் சென்னை, மே 27– தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், திட்டம் 205 (HIG) குடியிருப்போர் நல சங்கம் சார்பில்  ஆலோசனை கூட்டம் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் குடியிருப்பில் இன்று 27 ம் தேதி மாலை நடந்தது. இதில் எச்ஐஜி வீடு ஒதுக்கீடு பெற்ற உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், சென்னை அண்ணாநகர் கோட்டம், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், 205 குடியிருப்புக்கள் திட்டம், சுயநிதி திட்டத்தில் கட்டப்பட்ட 45 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பில் அனைத்து வீடுகளும் விற்பனையாகி விட்டது. இந்த திட்டத்தில் பணிகள் ஆரம்ப  காலம் 2020ம் ஆண்டு. 18 மாதத்தில் வீடுகள் கட்டப்பட்டு 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ம் தேதி பணிகள் முடிந்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால்  இன்னமும் வீடுகள் வழங்கப்படவில்லை. 95 சதவீதம் பணத்தை செலுத்தி விட்டு வீடுக்காக இரண்டு ஆண்டுகளாக காத்துக்கிடக்கிறார்கள். தற்போது

விஐடி செய்தி

Image
வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் பி.டெக் நுழைவு தேர்வு முடிவு வெளியீடு வேலுார், ஏப். 27– வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் பி.டெக்  நுழைவு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இது குறித்து வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தி: வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் நடப்பு  கல்வியாண்டில் (2023) பி.டெக்., பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு துபாய், குவைத், மஸ்கட் போன்ற வெளிநாட்டிலும், உள்நாட்டிலுமாக  121 மையங்களில் கடந்த 17 ல் முதல் 23ல் வரை கணினி முறையில் மாணவர்கள்  தேர்வு எழுதினர். மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை www.vit.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். நுழைவுத்தேர்வில் முதல் இடத்தை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த  குஷ்அக்ரா பாஸ்இஷ்த், 2 ம் இடத்தை மகாராஷ்ட்டிராவை சேர்ந்த ப்ரக்சல் ஸ்ரீனிவாஸ் செளத்ரி, 3 ம் இடத்தை மகாராஷ்ட்டிராவை சேர்ந்த மகின் பிரமோத்,  4ம் இடத்தை கேரளாவை சேர்ந்த ஆசித் ஸ்டென்னி, 5ம் இடத்தை பீகாரை சேர்ந்த அன்கிட் குமார்,  6 ம் இடத்தை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நந்யாலா பிரின்ஸ் பிரேன் அம் ரெட்டி,  7 ம் இடத்தை பீகாரை சேர்ந்த உமர் பைசல், 8 ம் இட

கைது

Image
ஆலங்காயம் அருகே நாட்டு  துப்பாக்கி பதுக்கியவர்   கைது ஆலங்காயம், ஏப். 28– ஆலங்காயம் அருகே நாட்டு  துப்பாக்கி பதுக்கியவரை வனத்துறையினர்  கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் வனத்துறையினர் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதில், ஆலங்காயம் அருகே எரிவட்டம் கிராமத்தை  சேர்ந்த விவசாயி அண்ணாமலை, 54, என்பவர் வீட்டில் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்தது. விசாரணையில், வன விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு வாடகைக்கு விட பதுக்கி வைத்தது தெரியவந்தது. வனத்துறையினர் அவரை கைது  செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல்  செய்தனர்.

விழா

Image
ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான திறனை உருவாக்கிக் கொண்டால் உயர்ந்த நிலைக்கு செல்லாம் திருவள்ளுவர்  பல்கலை துணை வேந்தர் பேச்சு வேலுார், ஏப். 28– ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான திறனை உருவாக்கிக் கொண்டால் உயந்த நிலைக்கு செல்லலாம் என  திருவள்ளுவர் பல்கலை துணை வேந்தர் ஆறுமுகம் பேசினார். வேலுார் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லுாரியில், 51 வது ஆண்டு விழா இன்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் மணிநாதன் தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசியதாவது: மாணவிகள் நல்ல நட்பை தேர்ந்தெடுக்க வேண்டும். வயதில் உயர்ந்தவர்களிடம் நட்பு கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய குறிக்கோள்களையும், உயந்த நிலையையும் அடைவீர்கள். நீங்கள் எவ்வளவு உயர் கல்வியை பெற்றாலும் அதன் மூலம் ஒரு நல்ல வேலை வாய்ப்பு பெற்றாலும், அதை விட முக்கியமானது ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான திறனை உருவாக்கிக் கொண்டால் உயர்ந்த நிலைக்கு செல்லாம். ஆசிரியர்கள் கதை சொல்லி பாடம் நடத்த வேண்

நிறுத்தம்

கோவை எக்ஸ்பிரஸ் நடுவழியில் 20 நிமிடம் நிறுத்தம் வேலுார், ஏப். 28– மர்ம நபர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. சென்னையிலிருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7:45 மணிக்கு வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே முருந்தராயபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது டி 9  முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியிலிருந்து மர்ம நபர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயில் என்ஜின்  டிரைவர் அந்த பெட்டிக்கு வந்த விசாரணை நடத்தியதில், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார் என தெரியவில்லை. இதனால் 20 நிமிடம் நடுவழியில் நிறுத்தப்பட்டு ரயில் தாமதமாக சென்றது. காட்பாடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

கைது

Image
காட்பாடி அருகே விவசாயி கொலை வழக்கில் மருமகன் கைது வேலுார், ஏப். 28– காட்பாடி அருகே, விவசாயி கொலை வழக்கில், அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரியை சேர்ந்தவர் செல்வம், 62, விவசாயி. இவரது மகன் பசுமதி, 30, மகள் ஜெயலட்சுமி, 40, அவரது கணவர் வாசு, 35. செல்வத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை பிரிப்பது குறித்து மகனுக்கும், மருமகனுக்கும் தகராறு இருந்து வந்தது. கடந்த 26ம் தேதி இரவு 10:00 மணிக்கு மகள் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்ற செல்வம் சாப்பிட்டு விட்டு வெளியே படுத்து துாங்கினார். நேற்று  கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டு வீட்டு முன்பு அவர் கிடந்தார். லத்தேரி போலீசார் நடத்திய விசாரணையில், நிலத்தகராறில் மருமகன் வாசு 27 ம் தேதி அதிகாலை செல்வத்தை கட்டையால் அடித்துக் கொலை செய்து ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியது தெரியவந்தது. லத்தேரி போலீசார் வாசுவை இன்று கைது செய்தனர்.

திருட்டு

Image
தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை  திருட்டு ஆம்பூர், ஏப். 28– ஆம்பூர் அருகே, தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன், 50. இவர் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினடன் நேற்று  சென்னைக்கு சென்றனர். இன்று காலை 10:00 மணிக்கு  வந்த போது  வீட்டில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த கிடந்தது. உள்ளே சென்று பார்த்தில், பீரோ உடைத்து அதிலிருந்த 28 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. உம்மராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிகிச்சை

Image
தேனீக்கள் கொட்டியவர்களுக்கு மொட்டை அடித்து சிகிச்சை வேலுார், ஏப். 28– குடியாத்தம் அருகே, தேனீக்கள் கொட்டிய 10 பேருக்கு அரசு  மருத்துவமனையில் மொட்டை அடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே தட்டப்பாறை  பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்பாபு, 20, ராஜேஷ், 19. வெல்டிங் வேலை செய்து வருகின்றனர். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த எட்டு மாணவர்கள் குடியாத்தம் அருகே மூலக்கொல்லை வனப்பகுதிக்கு  நேற்று  ( 26)  மாலை 5:00 மணிக்கு சென்று மரத்தில் கட்டியிருந்த தேன்கூட்டை உடைத்து தேன் எடுக்க முயன்றனர். ஆத்திரமடைந்த தேனீக்கள் அவர்களை விரட்டிச் சென்று கொட்டியது.  படுகாயமடைந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் தலை முழுவதும் தேனீக்கள் கொட்டியதில் அதன் கொடுக்குகள் இருந்தன. ஒவ்வொருவரின் தலையிலும் 10க்கும் மேற்பட்ட கொவுடுக்குகள் இருந்ததால் மருத்துவமனை ஊழியர்களை கொண்டு அவர்களுக்கு மொட்டை அடித்து கொடுக்குகளை அகற்றி சிகிச்சை அளித்தனர். இந்த சிகிச்சை நேற்று  இரவு 10:00 மணிக்

கைது

Image
14 கிலோ கஞ்சா கடத்த முயன்றவர் கைது வேலுார், ஏப். 28– ரயிலில் பெங்களூருக்கு கடத்த முயன்ற 14 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றவரை போலீசார் கைது  செய்தனர். வேலுார்  மாவட்டம், மதுவிலக்கு போலீசார் இன்று காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாலை 3:00 மணிக்கு ஹவுராவிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு செல்லும் எஸ்வந்த்பூர் ரயிலில் சீட்டுக்கு அடியில் 9 பண்டங்களில் 14 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், ஓடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம், கோச்சபாடா திரேசரு கிராமத்தை சே்ர்ந்த அபிேஷக் குடாய், 23, என்பவர் பெங்களூருக்கு  கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தற்கொலை

Image
ஆற்காடு அருகே குடும்ப தகராறு 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை ஆற்காடு, ஏப். 28– ஆற்காடு அருகே, குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே மேல்புலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 40. இவர் சென்னை கோயம்பேடிலுள்ள சலுான் கடையில் பணியாற்றி வருகிறார்.  மனைவி ரேணுகா, 35. தம்பதிக்கு சுருதி, 5, என்ற மகளும்,  தீபக், 3,  என்ற மகனும் உள்ளனர். இன்று மாலை 4:00 மணிக்கு அதே பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் ரேணுகா, சுருதி, தீபக் ஆகியோர் சடலமான மிதந்தனர். கலவை போலீசார் மூவரின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சங்கர் சென்னையில் பணியாற்றுவதால் 15 நாளுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். இதனால் அவரது தாய் சரஸ்வதி, 65, என்பவர்  மறுமகள் ரேணுகாவை பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விரத்தியடைந்த ரேணுகா சுருதி, தீபக் ஆகியோரை  கிணற்றில் தள்ளி கொலை செய்த விட்டு, அவருக்கும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தப்பல்

Image
அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓட்டம் வேலுார், ஏப். 29– வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறுவர்கள்  தப்பி ஓடினர். வேலுார் மாவட்டம், வேலுார் காகிதப்பட்டறையில் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த  42 சிறுவர்கள்   அடைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 27 ல்  இரவு 8:00  மணிக்கு இல்லத்திலிருந்த ஆறு சிறுவர்கள் அங்கிருந்த மூன்று காவலர்களை  தாக்கி விட்டு தப்பினர்.  வேலுார் வடக்கு போலீசார்  தனிப்படை அமைத்து துந்து  பேரை பிடித்து இல்லத்தில் அடைத்தனர். கடந்த 13 ல் இரவு 9:00  மணிக்கு ஐந்து சிறுவர்கள் சுவர் ஏறி  குதித்து  தப்பியோடினர். இரண்டு மணி நேரத்தில் போலீசார் அவர்களை   பிடித்து இல்லத்தில் அடைத்தனர்.  இல்லத்தில் இருந்த சிறுவர்களிடம் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு வார்த்தை நடத்தி  கவுன்சிங் அளிகவும் ஏற்பாடுகள் செய்தார். இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இல்லத்தின் சுற்றுச் சுவர் அதிகரிக்கப்பட்டது. இல்லத்தை சுற்றிலும் 24 மணி நேரம் போலீசார் ரோந்து சென்று வந்தனர். இல்லத்தி

கைது

Image
போலி டாக்டர் கைது ராணிப்பேட்டை, ஏப். 29– சோளிங்கரில், போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், கொண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர், தமிழ்வாணன், 46, என்பவர் மூன்றாம் வகுப்பு படித்து விட்டு, சோளிங்கரில் கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக புகார்கள் வந்தன. சோளிங்கர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் கருணாகரன் கொடுத்த புகார்படி, சோளிங்கர் போலீசார் தமிழ்வாணனை இன்று  கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.

விழா

Image
பெண்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேற்றமடைந்து அரசியல் துாய்மையாகும் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் வேலுார், ஏப். 29– பெண்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேற்றடைந்து அரிசியல் துாய்மையாகும் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார். வேலுார் மாவட்டம்,  குடியாத்தம் தனியார் மகளிர்  கல்லுாரியில்  (அபிராமி கலை மற்றும் அறிவியல்  கல்லுாரி) பட்டமளிப்பு  விழா இன்று நடந்தது. புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் 200 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:  பெண்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். பிரதமர் மோடி தொடங்கிய முத்ரா வங்கி கடன்  திட்டத்தின் மூலம் 23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளன. அதில் 66 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  பெண்கள் அனைத்து துறைகளிலும் பங்கு பெற்று வருகின்றனர். ராணுவத்தில்  கமாண்டர் பதிவியில் 133 பெண்கள் உள்ளனர். இனி வரும் காலங்களில் பெண்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேற்றமடைந்து அரசியல் துாய்மையாகும். இவ்வாறு அவர் பேசினார். பின் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் பெண

பலி

Image
மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி திருப்பத்துார், ஏப். 29– திருப்பத்துார் அருகே, மின்சாரம் தாக்கி லைன் மேன் இறந்ததால் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். திருப்பத்துார் மாவட்டம், மாடப்பள்ளி காலனியை சேர்ந்தவர் தமிழ் ராஜ், 30. மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தார். நேற்று  ( 27) மாலை 5:00 மணிக்கு சோமநாதபுரம் பகுதியில்  டிரான்ஸ்பார்மர் பழுதானதால் அதன் மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது  அவர் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இன்று காலை 8:00 மணிக்கு அவர் இறந்தார். தமிழ் ராஜ் சாவுக்கு காரணமாவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி  அவரது உறவினர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு  திருப்பத்துார் தாலுகா போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தமிழ் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து  கலைந்து சென்றனர்.

கைது

Image
மணல் கடத்தலில் ஈடுபட்டால் குண்டாசில்  கைது  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திருப்பத்துார், ஏப். 29– மணல் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 210 பேருக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பத்துார் மாவட்டத்தில் ஓடும் பாலாற்றில் கள்ளத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுகிறது. மணல் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். ஆற்று மணலை பாதுகாப்பது அதிகாரிகள், மக்கள் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

விழா

Image
நாட்டின் புதிய சட்டங்கள் கொண்டு வந்து ஜனநாயகம் மிதிக்கப்படுகிறது இ. கம்யூ., கட்சி தேசிய பொதுச் செயலாளர் ராஜா வேலுார், ஏப். 30– நாட்டின் புதிய சட்டங்கள் கொண்டு வந்து ஜனநாயகம் மிதிக்கப்படுவதாக இ. கம்யூ., கட்சி தேசிய பொதுச் செயலாளர் ராஜா பேசினார். வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், முன்னாள் எம்.பி.,  இரா. செழியன் நுாற்றாண்டு விழா இன்று நடந்தது. வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்து, இரா. செழியனின் பாராளுமன்ற உரைகள் தமிழாக்கம் செய்யப்பட்ட நுால்களை வெளியிட்டார். இ. கம்யூ., கட்சி தேசிய பொதுச் செயலாளர் ராஜா பேசியதாவது: நாட்டின் புதிய சட்டங்கள் கொண்டு வந்து ஜனநாயகம் மிதிக்கப்படுகிறது.  பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  கார்ப்பரேட்டுக்களான அம்பானி, அதானி போன்றவர்கள் மத்திய அரசின் செயலால் வளர்ந்து கொண்டே போகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பேசுகையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை தமிழ்நாடு அரசு என்று  தான் சொல்ல வேண்டும்.  அமைச்சர்களும் மக்களால்தேர்ந

சாதனை

Image
டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறேன் சிபிஎஸ்.இ பிளஸ் 2 வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி காட்பாடி, மே.13- டாக்டருக்கு படிக்க ஆசைப்படுவதாக சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் எடுத்த மாணவி ரேவா சுதர்சன்ராஜ் கூறினார். *சிருஷ்டி வித்யாஷ்ரம்* சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வேலூர் மாவட்டம், காட்பாடி வித்தியாஷ்ரம் பள்ளி மாணவி ரேவா சுதர்சன்ராஜ் 500 மதிப்பெண்ணுக்கு 497 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இயற்பியல் 100, வேதியியல் 100, உயிரியல் 99,  கணிதம் 99, ஆங்கிலம் 99.மொத்த மதிப்பெண் 497 ஆகும். இவரை சிருஷ்டி பள்ளிகளின் குழும தலைவரும், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வருமான எம்.எஸ். சரவணன் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி மாணவி ரேவா பள்ளிக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று பாராட்டினார். *சாதனை மாணவர்கள்* பள்ளியில் 486 மதிப்பெண் பெற்று மாணவர்கள் ஆதித்ய சிங்க நரேந்திரன், விஜித் ஆகியோர் இரண்டாம் இடமும்,  ரக்க்ஷனா ரவிசங்கர் 485 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 450க்கு மேல் 44

பஸ்

Image
குடியாத்தம் 25 சிறப்பு பஸ்கள் இயக்கம் குடியாத்தம்: மே 13– வேலுார் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நாளை 15 ம் தேதி நடைபெறுகிறது. இதில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்  செலுத்துகின்றனர். பக்தர்கள் கலந்து  கொள்ள வசதியாக 15, 16 ம் தேதிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், வேலுார் கோட்டம் சார்பில் வேலுார், பேர்ணாம்பட்டு, ஆம்பூரில் இருந்து குடியாத்தத்திற்கு 25 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறையினர் தெரிவித்தனர்.

கைது

Image
4 ரவுடிகள் குண்டாசில் கைது வேலுார்: மே 13– வேலுார் தொரப்பாடியை சேர்ந்தவர் குமார், 30, பெரம்பலுார் செந்தில், 37, சேலம் ஈஸ்வரன், 23,  காளாம்பட்டு கதிரவன், 27. ரவுடிகளான இவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில்  ஈடுபட்டதால் வேலுார் மாவட்ட  போலீசார் கடந்த மாதம் அவர்களை கைது செய்து வேலுார் ஆண்கள் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தலா 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட  கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம் இன்று வழங்கினர்.

பாராட்டு

Image
கடந்த 2022 ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற 14-வது சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியின் போது சிறப்பாக பாதுகாப்பு பணி புரிந்தமைக்காக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர்.C.சைலேந்திரபாபு. இ.கா.ப , அவர்களால் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இப்பணியில் ஈடுபட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள்-3, உதவி ஆய்வாளர்கள்-5, தலைமை காவலர்கள்-6, முதல் நிலை  காவலர்கள்-15,  காவலர்கள்- 47,  ஆக மொத்தம் 84   காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு இன்று (12/05/2023) மாலை 05.00 மணியளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப அவர்களால் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கைது

வேலூர் மாவட்டம் திருவலம் EB கூட்ரோடு டாஸ்மாக் சூப்பர்வைசர் மதுபான விற்பனைத் தொகையை மறுநாள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டி தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் ஹோண்டா ஆக்டிவா வில் கடந்த 08.05.23 ம் தேதி இரவு 08.50 மணி அளவில் செல்லும்போது மர்ம நர்கள் மூன்று பேர் இவரை கண்காணித்து பின் தொடர்ந்து சென்று தற்செயலாக வாகன விபத்தை ஏற்படுத்துவது போல் மோதி அவரை காப்பாற்றுவது போல் நாடகமாடி டாஸ்மாக் சூப்பர்வைசர் வைத்திருந்த ரூபாய் 257000/ பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்று விட்டனர்.* *இது விஷயமாக டாஸ்மாக் சூப்பர்வைசர் திரு.G. அசோக் குமார், த/ பெ கோவிந்தராஜ், மெட்டுக்குளம் காட்பாடி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.* *இச்சம்பவம் சம்பந்தமாக வேலூர் மாவட்ட எஸ்பி திரு. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகர் அவர்கள் தலைமையில் ஒரு தனிப்படையும், காட்பாடி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பழனி அவர்களின் உத்தரவின் பேரில் ஒரு தனிப்படையும், காட்பாடி காவல் ஆய்வாளர் திரு. தமிழ்ச்செல்வன் தலை

கைது

Image
🔸  *திருவண்ணாமலை மாவட்டம்* *திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்பப் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்த நபரிடம் சமாதானம் பேசி முடித்து வைப்பதாக கூறி 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரியை விஜிலென்ஸ் போலீசார் கைதுள்ளனர்.*  👇

பலி

Image
பைக் மீது லாரி மோதி கணவர், மனைவி பலி கீழ்பென்னாத்துார்: மே 13– விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த பூங்குளம்  கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 55. விவசாயி.  இவர் மனைவி தங்கமணி, 47. இந்நிலையில் நேற்று இரவு 8:00 மணிக்கு  இவர்கள் இருவரும் பைக்கில் திருவண்ணாமாலை மாவட்டம்,  கீழ்பென்னாத்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் இருவரும் நள்ளிரவு 12:00 மணிக்கு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கீழ்பென்னாத்துார் சந்தைமேடு என்ற பகுதியில் சென்ற போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே இருவரும் இறந்தனர். கீழ்பென்னாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கூட்டம்

Image
🙏👍🌹 குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விவசாய குறைத்திருநாள் கூட்டம்-👌--------------- தமிழ்நாடு விவசாய சங்கம்-aiks- உட்பட பல்வேறு விவசாய அமைப்புகள் பங்கேற்பு!-💪----------- மேற்படி கூட்டம்- குடியாத்தம் வட்டாட்சியர் - விஜயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.🌹- வட்டார வேளாண்மை அலுவலர்-AD.. திரு. உமா சங்கர்- மற்றும்- வருவாய்த் துறையினர்.  ஊரக வளர்ச்சி- நகராட்சி/ மின்சார வாரியம். பொது பணித்துறை- வனத்துறை- போக்குவரத்து.. வேளாண்மை துறை.  உள்ளிட்ட-  துறை- களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.!-💐-------------------------------------------------------- வனவிலங்கு தொல்லையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க கேட்டு!-- சமீபத்திய புயல் மழையால் பாதித்த விவசாயிகளுக்கு- நிவாரண வழங்கக் கேட்டு!- குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை.  துவங்க கேட்டு!-- நெல் கொள்முதல் நிலையத்தை முறையாக- செயல்படுத்தக் கேட்டு!--. குடியாத்தம்- கொத்தகுப்பம் -அகரம் சேரி- பாலாற்றில் பாலம் கட்டு பணியே- விரைந்து தொடங்கு!- குடியாத்தம்-ஜீட்ட  பள்ளி   அருகே-  நீர்த்தேக்கத்தை தரம் உயர்த்திகட்டு!- பள்ளி மாணவர்களுக்கு. தங்க தடை இன்

அறிக்கை

வேலூர் மாவட்ட காவல்துறை  செய்தி வெளியீடு நாள் : 13.05.2023 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன்.. இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் சட்டத்திற்கு விரோதமான மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது.   2023-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்மந்தமாக 80 வழக்குகள் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட  நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய Lorry-6, JCB- 1, Tractor-14, மாட்டு வண்டி-49 என மொத்தம்-85 வாகனங்கள் மற்றும் 37-யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று 13.05.2023-ம் தேதி மேல்பாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு Tractor மற்றும் விருதம்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு நபரை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீத

முகாம்

Image
6 பேரை கொன்ற 2 காட்டு யானைகள் நாட்றம்பள்ளி மலைப்பகுதியில் முகாம் திருப்பத்துார்: மே 14– 6 பேரை  கொன்ற 2 காட்டு யானைகள் நாட்றம்பள்ளி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொது மக்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர். கர்நாடகா மாநிலம், மைசூர் வனப்பகுதியிலிருந்து 20 நாட்களுக்கு முன்பு தமிழக வனப்பகுதிகள் வழியாக 10 காட்டு யானைகள் தமிழக– ஆந்திரா மாநில வனப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. இந்த  யானைகள் கூட்டத்திலிருந்து இரண்டு காட்டு யானைகள் பிரிந்து தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை வனப்பகுதிக்கு கடந்த வாரம் புகுந்தது. அந்த  பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 2 பேர்களை மிதித்துக் கொன்றது.  அதற்கு முன்பு இந்த யானைகள் ஆந்திரா மாநிலம், குப்பம் அருகே மல்லனுார் பகுதியில் 4 பேரை தாக்கி கொன்றது. இதனால் ஆந்திரா மாநில வனத்துறையினர் இந்த 2 யானைகளை விரட்டினர். இதனால் இந்த 2 யானைகள் கடந்த  12 ம் தேதி திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே தகரகுப்பம்  மலைப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளது. நேற்று 12 ம் தேதி காலை விறகு பொறுக்க இந்த மலைக்கு சென்றவர்களை இந்த யானைகள் விரட்டியடித்தது. சிலரை தாக்

கைது

Image
டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த 2 பேர் கைது வேலுார்: மே 14– டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருவலம் டாஸ்மாக் கடையில் சூப்பிரைசராக பணியாற்றி வருகிறார்.  கடந்த 8 ம் தேதி இரவு வசூல் ஆன விற்பனை தொகை 2. 57 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி பணத்தை  கொள்ளையடித்துச் சென்றனர். திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சரவணன், 32, ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த தாமு, 23, ஆகியோர் அசோக்குமாரிடம் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரை போலீசார் இன்று  கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

Image
போதை மாத்திரை விற்ற 3 பேர்  கைது வாலாஜாபேட்டை: மே 14– போதை மாத்திரை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை மது விலக்கு போலீசார் நேற்று இரவு  ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அக்ராவரம் ரயில்வே பாலத்தின் மீது சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டிருந்த 3 பேரை பிடித்து  விசாரித்தனர். அதில் அவர்கள், ராணிப்பேட்டை மாவட்டம்,  காரையை சேர்ந்த பிரதீப், 26, அம்மூர் ராஜ்குமார், 23, மேல்புதுப்பேட்டையை சேர்ந்த சரவணன், 22, என்பதும், இவர்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞயர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது  தெரியவந்தது. போலீசார் இவர்களை கைது செய்து 20 கிபோ போதை மாத்திரைகள், ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தேர் திருவிழா

Image
தேரோட்டம் குடியாத்தம்: மே 14– வேலுார்  மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நாளை 15 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கெங்கையம்மன் தேராட்டம் இன்று நடந்தது. இதற்காக கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்றவர் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டது. இந்த தேர் குடியாத்தம் தர்ணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக குடியாத்தம் முக்கிய வீதிகள் வழியாக தேரேட்டம் சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். வழி நெடுக்க உப்பு, மிளகு ஆகியவற்றுடன் ரூபாய் நாணயங்களை தேர் மீது வீசி இறைத்து பக்தர்கள் தங்கள் நேர்திக் கடன் செலுத்தினர்.  மேலும் கோழிகளை பலியிட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர். குடியாத்தம் வருவார் கோட்டாச்சிர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன்  தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாளை 15 ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாண வேடிக்கை

போட்டி

Image
திருப்பத்தூர்மாவட்டம்     14-5-23  திருப்பத்தூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை இணைந்து நெகிழி இல்லா திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்கவும் அதற்காக  விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று காலை 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மினி மராத்தான் போட்டி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று  மாரத்தான் போட்டி நடைபெற்றது. என்ன மராத்தான் போட்டியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி,   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்,   திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைவர் ஆகியோர் கொடியசைத்து வைத்து துவக்கி வைத்தனர்.இதில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்குமஜூனியர் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. சீனியர் பிரிவில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும்ஜூனியர் பிரிவில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும்வெற்றி கோப்பையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அ

ஆர்பாட்டம்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்     14-5-23 வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர் கேட்டை கண்டித்து பாமகவினர் ஆர்பாட்டம்  ___________________________________         ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பாமக மேற்குமாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி துவங்கி வைத்தார் இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோ மாவட்டத்தலைவர் ஆறுமுகம் முதலியார் ,நகர செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் கிடையாது பகல் நேரத்திலும் மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவது கிடையாது மேலும் நோயாளிகளை தரக்குறைவாக நடத்துவது மக்களிடம் பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதுடன் மருந்துகளை விற்பனை செய்துவிட்டு நோயாளிகளுக்கு ஊசி மாத்திரைகளை வெளியில் வாங்கி வருமாறு வற்புறுத்துகின்றனர் இதனால் ஏழை எளிய கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கபடுகின்றனர் எந்த சிகிச்சை

அச்சம்

Image
திருப்பத்தூர்மாவட்டம்       14-5-23 ஆத்தூர் குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் இரண்டு யானைகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் ‌ திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான தகரகுப்பம், தண்ணீர் பந்தல், கரடிகுட்டை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டிருந்தன இந்த நிலையில் வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் நேற்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு ட்ரோன் கேமரா மூலம் யானைகள் முகாமிட்டுள்ள  இடத்தை கண்டறிய முயற்சி செய்தனர் அப்போது தகரகுப்பம்  அடர்ந்த காப்பு காட்டுக்குள் யானைகள் முகாமிட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.இந்த நிலையில் இன்று ஆத்தூர் குப்பம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையை  இரண்டு யானைகளும் கடந்து சென்றது இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறங்கி உள்ளனர் மேலும் உடனடியாக காட்டுப்பகுதியில் யானைகளை விரட்டியடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்  இந்த நிலையில் திருப்பத்தூர

விழா

Image
வேலூர்  14-5-23 குடியாத்தம் கெங்கை அம்மன்  சிரசு திருவிழாவை முன்னிட்டு இன்று திருதேர் விழா தொடங்கியது தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் உப்பு மற்றும் மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்  வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நாளை வெகு விமர்சையாக நடைபெறுகிறது இதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதுஇதனிடையே சிரசு திருவிழாவை முன்னிட்டு இன்று திருத்தேர் திருவிழா தொடங்கியது முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் உற்சவத்தை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வைத்து  கோபாலபுரம் கோயில் அருகாமையில் இருந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்நகரின் முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்றது வழி நேடுகும் ஆடு கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்  மேலும் தேரின் மீது உப்பு மற்றும் மிளகு உள்ளிட்டவற்றை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

விழா

Image
ராணிப்பேட்டைமாவட்டம்    14-5-23   தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் 69 கிலோ எடை கொண்ட கேக்கினை குழந்தைகளோடு உற்சாகமாக கொண்டாடிய அதிமுகவினர்  ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை நகர கழக அவைத்தலைவர் ஆர் குமரன் தலைமையில் நடைபெற்றது இதில் நகர கழகச் செயலாளர் கே.பி.சந்தோஷம் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சுகுமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை பொறுப்பேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு  அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை கொரடா சு.ரவி சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக  வரவேற்றனர் பின்னர் அலுவலகத்தின் வெளியே உள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.. இந்த செயல்வீரர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவிஇந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளை அதிமுக கழக

கூட்டம்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்   14-5-23         நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய ஊரக வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் -  கரும்பு டன்னுக்கு ரூ.4000 மற்றும் நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் -ஆற்காட்டில் நடந்த விவசாயிகள் சங்க மாநில செயற்குழுவில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது      ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட அலுவலகத்தில்   தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்  மாநில தலைவர்   வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் உதயகுமார் மாநில துனைத்தலைவர் ஹரிமூர்த்தி  மாநில அமைப்பாளர் இராமதாஸ் மாநில இளைஞரணி தலைவர்  சுபாஷ் மாவட்ட தலைவர்கள் (இராணிப்பேட்டை) மணி (வெங்கடேசன்) வேலூர் (ஆனந்த ரெட்டியார்) திருப்பத்தூர் உட்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  இக்கூட்டத்தில்   தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தமிழக அரசு தடுக்க வேண்டும்  நெல் குவிண்ட

சந்திப்பு

Image
ராணிப்பேட்டைமாவட்டம்   14-5-23   காவனூரில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்      ராணிப்பேட்டைமாவட்டம்,திமிரி அருகேயுள்ள  காவனூரில்  இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி  உள்ளது இந்த பள்ளி 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1985-86ஆம் ஆண்டு 5-ஆம் வகுப்பு படித்து முடித்த பழைய மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி 38 ஆண்டுகளுக்கு பிறகு  நடந்தது. பள்ளி நிறுவனர்  சேட்டு தலைமை தாங்கினார். பள்ளிக் கணக்காளர்  லட்சுமி, தலைமை ஆசிரியர்  கோபி, கணினி ஆசிரியர்  .சுரேஷ், பழைய மாணவர்கள் சங்க துணைத் தலைவர்  .குணாநிதி, உள்ளிட்டோர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஹைதராபாத் எக்ஸெல் மருத்துவமனை டாக்டரும், முன்னாள் மாணவர் சங்க செயலாளருமான மருத்துவர்.பிரபு,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் 38 ஆண்டுகள் பள்ளி கல்வி சேவையை பாராட்டி நிர்வாகிக்கு திமிரி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் வாழ்த்து மடல், பழைய மாணவர்கள் சார்பில் மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. பழைய மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் மலரும் நினை

விழா

Image
கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா குடியாத்தம்: மே 15– வேலுார்  மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று நடந்தது. வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் பிரசித்திப்பெற்ற கெங்கையம்மன் கோவிலில்ந சிரசு திருவிழா இன்று நடந்தது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  கலந்து கொண்டனர். இதற்காக குடியாத்தம் முத்ததோியாலம்மன் கோவிலிலிருந்து சிரசு ஊர்வலம் புறப்பட்டு கெங்கையம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக இன்று உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டது.  தமிழகம், ஆந்திரா,  கர்நாடகா மாநில்ங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். 25 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலுார் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். சிரசு ஊர்வலம் வரும் பாதையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், மேலும் ஊர்வலத்தின் மீது மிளகு, உப்பு துாவினர். தொடர்ந்து அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாண வேடிக்கை நடந்தது. நாளை  16 ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 17 ம் தேதி பூப்பல்லக்கு விழா,

பலி

Image
🔸  *ராணிப்பேட்டை மாவட்டம்*  *ராணிப்பேட்டை அடுத்த பெல் பைபாஸ் சாலையில் சாலை ஓரம் பள்ளத்தில் கார் கவர்ந்து இரண்டு சிறுமிகள் பலி மூன்று பேர் படுகாயம் சிப்காட் போலீசார் விசாரணை.* 👇