கைது
குண்டாசில் கஞ்சா வியாபாரி கைது ஆற்காடு, டிச. ஆற்காட்டில் தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருக்கும் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன், 33. இவர் கடந்த மாதம் 28 ம் தேதி தாய், மகள் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து ராணிப்பேட்டை மகளிர் போலீசார் பாஸ்கரனை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். இவர் மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு எஸ்.பி., தீபா சந்தியன் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையிலுள்ள அவரிடம் வழங்கினர்.