கெட் அவுட் அமைச்சர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த்தை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்
வேலூர்: ஊருக்குள் விடாமல் அமைச்சர் துரைமுருகன், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். சிட்டிங் அமைச்சர் மற்றும் எம்பி ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அணைக்கட்டு கன்னிகாபுரம் பகுதியில் வாக்குசேகரிக்கச் சென்ற அமைச்சர் துரைமுருகன், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை தடுத்து நிறுத்தி ஊருக்குள் வரவிடாமல் கிராம மக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். சாலை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை தேவைகளையும் செய்துதரவில்லை. கடந்த முறை தேர்தலுக்கு வாக்கு கேட்க வந்த கதிர் ஆனந்த் சாலை வசதி, தண்ணீர் வசதி செய்து தருவதாக கூறினார். அதை நம்பி அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தோம். அதன் பிறகு கதிர் ஆனந்த் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தொகுதிக்கும் வரவில்லை. இப்போது தேர்தல் வந்துள்ளது இதனால் எங்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வந்துள்ளார். ஏன் வருகிறீர்கள்எனகுற்றஞ்சாட்டி வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பாபு கெஞ்சி பார்த்தார். பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். கிராம மக்கள் சம்மத
Comments
Post a Comment