சபாஷ்

*வேலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் ரூ.1,35,087 பணத்தை இழந்த பெண் மருத்துவ நிபுணரின் பணம் முழுவதும் மீட்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைப்பு*

வேலூர் மாவட்டத்தில் வேலூர் CMC மருத்துவ வளாகத்தில்  பணிபுரியும் *பெண் மருத்துவ நிபுணர்* ஒருவருக்கு  செல்போனில் SBI Net banking முடக்கபட்டுள்ளதாகவும் அதனால் உடனே  PAN card update செய்ய வேண்டுமென வந்த SMS-ல் இருந்த லிங்க் கிளிக் செய்து வங்கி தொடர்பான விவரங்களை அதில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சைபர் திருடர்கள் அவரது வங்கி விவரங்களை தெரிந்து கொண்டு அவரது வங்கி கணக்கிலிருந்து 3 தவணைகளில் *ரூபாய் 1,35,087* பணத்தை அபகரித்து விட்டதாக கொடுத்த புகாரின்  அடிப்படையில் நடவடிக்கை எடுத்த வேலூர் சைபர் கிரைம் போலீசார்  இவர்கள் இழந்த *ரூ.1,35,087/-* பணத்தை மீட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.ராஜேஸ் கண்ணன் IPS* அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் *திரு.D.குணசேகரன்* அவர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் அவர்கள் பேசுகையில் Call, SMS or link வாயிலாக வங்கி விவரங்களை பகிர கூடாது எனவும், *ஆன்லைனில் லோன் தருவதாக சொல்லும் செயலிகளை (Apps)* பதிவிறக்கம் செய்து பிரச்சனைகளில் மாட்டிகொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மேலும் *வங்கிகளின் தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி சைபர் கிரிமினல்கள் பொது மக்களை அதிகம் ஏமாற்றக் கூடும்* எனவும் இவ்வாறு சைபர் குற்றங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக *1930* என்ற இலவச உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்