நீதி


 விதுரநீதி 13:--- தொலைந்து போனதை பற்றி துக்கபடாதவனும் ஆபத்து நேரத்தில் அறிவு மங்காதவனுமே பண்டிதன்

 🏵️ விதுர நீதி சாஸ்திரம்!

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது..

1. பசி வயிற்றை கிள்ளும் போது.

2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.

3. போதையில் இருக்கும் போது.
----------------------------------------
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது..

1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.

2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.

3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
----------------------------------------
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்..

1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.

2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.

3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
----------------------------------------
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது..

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.

2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள். 

3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
----------------------------------------
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது...மன்னிக்கவும் கூடாது..

ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது. 

இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்...

 விதுரநீதி 14:--- ஒரு செயலை ஆரம்பித்த பின்பு மனம் போன போக்கில் நேரத்தை வீணாக்காமல் மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே பண்டிதன்




 
விதுரநீதி 17:--- தடையில்லாத கனிவான பேச்சு ஊகிக்கும் திறன் காலத்திற்கேற்ப புத்திகூர்மையும் உடையவன் பண்டிதன

 விதுரநீதி 16:--- ஒருவர் தன்னை புகழும்பொழுது மகிழ்ச்சி அடையாமலும் இகழும்பொழுது கண்கலங்காமல் இருப்பவனே பண்டிதன்

 விதுரநீதி 15:--- ஈடுபடும் செயல்களில்  (நற்செயல்கள் மட்டுமே) வெறுப்படையாமல் மனந்தளராமல் பொருளீட்டுபவன் பண்டிதன்

 விதுரநீதி 18:--- படிக்கும் ஙால்களை சீக்கிரம் புரிந்து கொள்பவனும் படிப்பிற்கேற்ப கொள்கைகளை கடைபிடிப்பவனுமே பண்டிதன்

 விதுரநீதி 19:---               கல்வி செல்வம் வீரம்(அதிகாரம்)           ஆகிய மூன்றும் அதிகமிருந்தாலும் கர்வமில்லாமல் இருப்பவனே பண்டிதன்

 விதுரநீதி 20:--- சாஸ்திரங்களை படிக்காதவன் கர்வமிருப்பவன் இழிவான செயல்களால் பணத்தை சம்பாதிப்பவன் மூடன்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்