Posts

Showing posts from January, 2026

விவசாய கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பலி

Image
விவசாய கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு துணிகளை துவைப்பதற்கு சென்று தவறி விழுந்து பரிதாபம் ராணிப்பேட்டை,பிப்.1– ராணிப்பேட்டை அருகே, கிணற்றிற்கு துணி துவைக்க சென்ற சிறுமிகள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த ஆரூர் கிராமம், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன்; கூலி தொழிலாளி. இவரது மகள்கள் யுவஸ்ரீ,13; எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.பிரியங்கா,12; ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் பிரியா ,13,; எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் மூவரும் பொன்னம்பலம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் யுவஸ்ரீ, பிரியங்கா, யுவஸ்ரீயின் தோழி பிரியா ஆகிய மூன்று சிறுமிகளும் அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றின் அருகே துணி துவைக்க சென்றதாக கூறப்படுகிறது.  இதில் யுவஸ்ரீ எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்ததைக் கண்டு சகோதரி பிரியங்கா மற்றும் தோழி பிரியா ஆகியோர் இருவரும் யுவஸ்ரீயை மீட்க நீரில் இறங்கியுள்ளனர்...

கொலை

Image
*ஆம்பூர் அருகே மதுபோதையில் நண்பனை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்த நபர் கைது.*   *ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை..* ஆம்பூர்:    திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த மாதனூர்  சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்புன் கூலி தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரும், நண்பர்களான நிலையில், நேற்று இரவு இருவரும், ஒன்றாக அப்பகுதியில் உள்ள வெல்டிங் கடை எதிரே மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர், அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த கோகுல் பீர் பாட்டிலால், அப்புன் தலையில் தாக்கியுள்ளார், இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்புன் மீது அங்கிருந்த டிரம்மை தூக்கிபோட்டு கொலை செய்துவிட்டு, அங்கேயே கோகுல் அமர்ந்திருந்துள்ளார், உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், அப்புன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இக்கொலைச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து,  கொலை செய்து விட்டு, அங்கேயே அமர்ந்திருந்த கோகுலை கைது செய்து, கோகுலிடம் ...

போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பத்தூரில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் சார்பாக 30.01.2027 அன்று மதியம் 2.00 மணிக்கு *"போதை இல்லா சமூகமே வளர்ச்சிக்கு ஆதாரம்" என்ற தலைப்பில்* போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இதில் கந்திலி காவல்துறை ஆய்வாளர் திரு மேன்லி லாமேக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பொருள் வகைகள், போதைப் பொருளினால் மனித சமுதாயத்திற்கு விளையும் தீங்குகள், போதை பொருள் பயன்படுத்தினால் தண்டனை தரும் சட்டங்கள், போதைப் பொருளிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று மாணாக்கர்களிடையே உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ப. குமரேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வு போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ல ரூபா அவர்கள் ஒருங்கிணைத்தார். இதில் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்

சுற்றுலா

Image
நமது தமிழ்நாடு அரசு, பக்தர்களின் வசதிக்காக, தினமும் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 9 நவக்கிரக பரிகார  திருத்தலங்களுக்கு, குறைந்த செலவில்  சிறப்பான பேருந்து வசதிகளை (2 பேருந்துகள் A/C & Non A/C)  நவகிரக சுற்றுலா பேருந்து என்ற பெயரில் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது👍🤝 புறப்படும் இடம் : கும்பகோணம் பேருந்து நிலையம் நேரம் : காலை 5.00 மணி பயணம் நிறைவு பெறும் நேரம் : இரவு 8.00 மணி கட்டணம் :Non A/C Bus Rs.750/- A/C Bus Rs. 1350/- டிக்கெட் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே பெற முடியும்.  புக் செய்ய www.tnstc.in  (tnstc நவக்கிரகா)  TNSTC Mobile Application Ph : 94432 63988 & 94897 95509 ஏசி பஸ் அனைத்து வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும்...  நான் ஏசி பஸ் அனைத்து நாட்களிலும் சிறப்பாக செயல்படுகிறது🤝👍 உணவு வசதிகள் : காலை & மதிய உணவு  இரண்டும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.  பக்தர்களுக்கு, காலை உணவு ரூபாய் 60/-  மதிய உணவு 90/- ரூபாய்க்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.  மேலும் பேருந்தில் வரும் பக்தர்கள் ச...

செய்திகள்

Image

ஏமாளிகள்

Image
One day, Hitler came to a cabinet meeting carrying a chicken. He held the chicken’s head tightly under his arm. As he walked, he began plucking its feathers one by one. The chicken screamed in agony, struggling desperately to escape from Hitler’s grip. But Hitler did not let go, nor did he pay any attention to its cries—he just kept plucking. The cabinet members said to him: “Don’t torture that poor creature like this. Let it go.”   But Hitler refused to listen to anyone. Finally, after plucking all its feathers, he threw the chicken to the ground. Then he took some grains out of his pocket and began feeding them to the chicken. In that state, the chicken, desperate for food, started looking toward Hitler’s hand again. Hitler called it closer, offering the grains. After a while, the chicken came and sat near him, eating those few grains. The same chicken that had been struggling to escape from Hitler all this time now sat beside him again—for just a handful of grai...

செய்திகள்

Image