Posts

Showing posts from November, 2025

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் நாள், நேரம் அறிவிப்பு

Image
கிரிவலம் செல்லும் நாள், நேரம் திருவண்ணாமலை, டிச.1– திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 3 ம் தேதி  காலை பரணி தீபம், மாலை மகா தீபம் விழா நடக்கிறது. இந்த மாதம்  பெளர்ணமி கிரிவலம் நாள், நேரம்  அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 4.12.2025 ம் தேதி வியாழன்   மாலை 7:58 மணி முதல் அடுத்த நாள் 5.12. 2025 ம் தேதி  வெள்ளி   காலை 5.37  மணி வரை கிரிவலம் செல்லலாம்.  கார்த்தீிகை தீபம் திருவிழா மற்றும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 4764 சிறப்பு பேருந்துகள் மற்றும் வேலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் இருந்து 200 தனியார் பேருந்துகள் 24 மணி  நேரமும் இயக்கப்படுகின்றன. 500 ஆந்திர மாநில பேருந்துகள், 20 கர்நாடக மாநில பேருந்துகள், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த 200 படுக்கை வசதிகளுடன்  சொகுசு ஏசி பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள்...

முன்னாள் மாணவர் சங்கம் தொடக்கம்

Image
  முன்னாள் மாணவர் சங்கம் தொடக்கம் காட்பாடி, டிச. 1– வேலுார் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கம் தொடக்கவிழா பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது.   கூட்டத்திற்கு முன்னாள் மாணவி எம்.கலைவாணி தலைமை தாங்கினார்.  முன்னதாக எம்.கே.சூர்யா வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், மாணவ சங்கத்தினை தொடக்கிவைத்து பேசினார்.   தலைமையாசிரியை எஸ்.ஜெயலட்சுமி, முதுகலை ஆசிரியை எஸ்.நர்மதாபாய் ஆகியோர் முன்னாள் மாணவிகள் சங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என பேசினார்கள்., முன்னாள் மாணவிகள் இந்து, எஸ்.லீலாகுமாரி, வி.குமுதா, வி.சுதா, ஆர்.காந்தி, என்.ஜெயந்தி, ஆர்.முனியம்மா, ஜி.லட்சுமி, அர்ச்சனா, மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பேசினர். பள்ளியின் முன்னாள்  மாணவர் சங்கத்தின் சார்பில் ஆண்டு விழாவில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. .தற்போது பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கு...

திருவண்ணாமலை தீபம் விழா கர்பூரம் ஏற்ற தடை

Image
கர்பூரம் ஏற்ற தடை திருவண்ணாமலை, டிச. 1– திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருவிழா நடந்து வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கார்த்திகை தீபம் திருவிழா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் திருவிழா நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சென்று  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் ஆலைமோதுகிறது.  எனவே பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ,  கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றக் கூடாது. மேலும் கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டத்திற்குள் செல்ல இரு சக்கர வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. மீறி செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் பவனி

Image
அம்மன்தேர், சண்டிகேஸ்வர் தேர் பவனி திருவண்ணாமலை, டிச.1– திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பஞ்சமூர்த்திகள் மகா ரதங்கள் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் முதலாவதாக விநாயகர் தேர்,  அதன் பின்னால் முருகர் தேரும் சென்றது. இவை இரண்டும் நிலைக்கு வந்ததும் மூன்றாவது பெரிய தேரான அருணாசலேஸ்வரர் மகா ரதம் சென்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். இந்த தேர் நிலைக்கு வந்ததும் இரவு அம்மன் தேர், அதன் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் சென்றது. அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுத்துச் சென்றனர். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமிகள் இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டம் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.  

ஜெகன் டிராவல்ஸ் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்A.P. நந்தகுமார் திறப்பு

Image

தி.மலைதீபம் விழா கனரக வாகனங்களுக்கு மாற்று பாதை காவல் துறை அறிவிப்பு

Image

திருவண்ணாமலை தீபம் விழா தற்காலிக கார் -பைக்பார்கிங் காவல் துறை அறிவிப்பு

Image

திருவண்ணாமலைலை தீபம் விழா காவல் துறை அறிவிப்பு

Image

திருவண்ணாமலைகார்த்திகை தீபம் தேரோட்டம் சிறப்பு படங்கள்

Image

முதுமை

Image
*முதுமை*  அடர்முடி  கழிந்து  நரை  கூடியது.  புன்னகை  பற்கள்  விழுந்து  மகிழ்ச்சி  ஓடியது.  ஆடிய  ஓடிய  கால்கள்  தளர்ந்து  கோல்  தேடுகிறது.  சீரணம்  சிறுத்து  அஜீரணம்  வருத்துகிறது.  தூக்கம்  ஓடி  துக்கம்  மேலிடுகிறது.  இனித்த  வாழ்வு  கசக்கிறது.  இனி  வாழ்வே  பிணி  மனமே  துணி  மரணம்  தான்  இனி.  பணமோ  பொன்னோ  பொருளோ  கடவுளோ  காமமோ  காதலோ  சாதியோ  மதமோ  எல்லாமே  பொய்.  மெய்(உடல்)  என்பதே  பொய்  மரணமே  மெய்.(உண்மை) இனிய வணக்கம் நண்பர்களே .🙏😍