பாலாறு மலர் தூவி மரியாதை செலுத்திய கவர்னர்

பாலாற்றில் மலர் துாவி
மரியாதை செய்த கவர்னர்


ராணிப்பேட்டை, ஜூன் 29
ராணிப்பேடடை பாலாற்றில் கவர்னர் ரவி மலர் துாவி மரியாதை செய்தார்.
வேலுாரில் பாலாறு பெருவிழா ஐந்து நாள் மாநாடு நடந்து வருகிறது. இதில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். விழா முடிந்ததும் வேலுார் தங்கக்கோவிலை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து சென்னை செல்லும் வழியில், ராணிப்பேட்டை   மேம்பலத்தின் மீது நின்று பாலாற்றுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். 

Comments