Posts

Showing posts from February, 2025

செய்திகள் 4

Image
 ராணிப்பேட்டைமாவட்டம்  மலையடிவாரத்தில் மேய்ச்சலில் இருந்த 13 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழப்பு - வருவாய் துறையினர் விசாரணை.        ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா  அடுத்த அனந்தலை மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில், மேய்ச்சலில் இருந்த 13 செம்மறி ஆடுகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். வாலாஜா  அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி(50). விவசாயியான இவர் சொந்தமாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற நிலையில், செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென ஆடுகள் ஒவ்வொன்றாக மர்மமான முறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறையினர் ஆடுகள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வரு...

செய்திகள் 3

Image
 ராணிப்பேட்டைமாவட்டம்      மேல்விஷாரம் நகராட்சியில் வார்டுகளுக்கு முறையாக பணிகளை பிரித்து வழங்காமல் நகர மன்ற நிர்வாகத்தை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி  7 திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  ராணிப்பேட்டை நகராட்சியில் மொத்தமாக 21 வார்டுகள் உள்ளன. ஆனால் நகராட்சி நிர்வாகம் ஒரு சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பணிகளை வழங்குவதாகவும், சில வார்டுகளுக்கு மட்டும் நீண்ட நாட்களாக எந்த விதமான தேவைகளையும் வழங்காமல் செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் இன்று மேல்விஷாரம் நகரமன்ற கூட்டம் நடைபெற்ற போது, நகராட்சி நிர்வாகம் நாங்கள் கூறும் குறைகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், தங்களது வார்டுகளுக்கு முறையாக பணிகளை பகிர்ந்து வழங்குவதில்லை என குற்றம் சாட்டியதோடு, நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு நக...

செய்திகள் - 2

Image
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சுப்புலட்சுமி, விஷ்ணு பிரியா மற்றும் அதிகாரிகள் முன்னிலை வைத்தனர்.   கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்தனர்.அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்ததாவது,வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் பல்வேறு தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியிடுகின்றனர். இதனால் நீரின் தரம் பாதிக்கப்பட்டு விஷமாக மாறி வருகிறது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை மற்றும் அகரம் பாலாற்றில் தண்ணீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்.இதை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கழிவுநீரை ஆற்றில் கலப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய...

செய்திகள் - 1

Image
 வேலூர்     28-2-25  சோமசமுத்திரம் திருவள்ளூவர் தெருவின் நடுவே உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் மக்கள் கோரிக்கை  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோம சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு நடுவில் இரண்டு மின்கம்பம் உள்ளது.திருவிழா காலங்களில் சுவாமி ஊர்வலம் வாகனம் , நெசவு பொருட்கள் ‌ஏற்றி வரும் வாகனம் வந்து செல்லவும், அவசர மருத்துவ சேவைக்கு  ஆம்புலன்ஸ் வந்து செல்லவும்,  இறந்தவர்களின் சடலத்தை எடுத்து செல்லவும் முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த இரண்டு  மின்கம்பங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர்     28-2-25  பார் கவுன்சில் பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கையையும் மொழி ஆதிக்க திட்டத்தையும் மத்திய அரசு கைவிட கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்     வேலூர்மாவட்டம்,காட்பாடி பார் அசோசியேஷன் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் விரைவில் தமிழ்நாடு வ...

ராசி பலன்

Image
🕉️🕉️🕉️🕉ஶ்ரீராமஜயம்.🕉* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *ஹோரை* *பஞ்சாங்கம் படித்தல் பலன்* ராசிபலன்* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *பஞ்சாங்கம் ~* *க்ரோதி வருடம்~* *மாசி மாதம் ~ 16* *{28.02.2025}* *வெள்ளிக்கிழமை*   *நாள்~* *மேல் நோக்கு நாள்{⬆️}* *1.வருடம் ~* *க்ரோதி  வருடம்*  *{க்ரோதி நாம ஸம்வத்ஸரம்}* *2.அயனம் ~* *உத்திராயணம்  .* *3.ருது ~* *ஸிஸிர ருதௌ.*                                                                                                                   *4.மாதம் ~* *மாசி மாதம்*  *{கும்ப மாஸம்}* *5.பக்ஷம்~* *சுக்ல பக்ஷம்* *6 . திதி ~* *காலை 07.17 am வரை அமாவாசை* *பிறகு~  பிரதமைதிதி*  *ஸ்ராத்த திதி~* *பிரதமை திதி* *7.நாள்* *வெள்ளிக்கிழமை* *{பிருகு வாஸரம்}...

செய்திகள் சில

Image
 திருப்பத்தூர்மாவட்டம்   வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து ஆண் உறுப்பு காட்டி பெண்ணை பாலியல் சீண்டலுக்கு முயற்சி. பெண் கூச்சல்யிட்டதால் மர்ம நபர் தப்பி ஒட்டம். புகாரின் பேரில் நகர போலீஸார் விசாரணை. ----------------------- திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் அருண்(35). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கார் ஒட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி, 5 வயது மகள் அக்ஷரா, 3 வயது மகன் அஷ்விக் ஆகியோர் நியூடவுன் பகுதி சேஷாகிரி ராவ் தெருவில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வருகின்றனர். பிள்ளைகள் இருவரும் அருகில் உள்ள பள்ளிக்கு கல்வி பயின்ற சென்று வருகின்றனர். கணவர் அருண் வாரம் ஒரு முறை வீட்டிற்க்கு வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் வீட்டில் தனியாக பெண் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கதுவை தட்டி உள்ளார். உறவினர் வந்து இருக்கும் என்ற கருதி அஸ்வினி காதுவை திறந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் தன்னுடைய ஆண் உறுப்பு காட்டி பெண்ணை பாலியல் சீண்டலுக...

மசான கொள்ளை திருவிழா

Image
வேலூர்     வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் - 1008 சங்காபிஷேகம் செய்யப்பட்டது திரளானோர் வழிபாடு  _______________________________________     வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி சங்குகளை யாக சாலையில் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து மஹா பூர்னாஹதிக்கு பின்னர் 1008 சங்குகளும் கொண்டு செல்லப்பட்டு ஜலகண்டீஸ்வரருக்கு பால் தயிர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்து பின்னர் 1008 சங்குகளில் உள்ள நீரை கொண்டு சங்காபிஷேகம் செய்து ஜலகண்டீஸ்வரருக்கு தங்கக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர் வேலூர்      சத்துவாச்சாரியில் கைலாசநாதர் கோவில் சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்      வேலூர்மாவட்டம...

தர்ணா

Image
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை  காதலித்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தர்ணா  வேலூர் வேலூர் மாவட்டம், நஞ்சுண்டாபுரம், கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். ராணுவ வீரர்.இவரும் அதே பகுதியை சேர்ந்த அன்பரசி என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் பிரபாகரன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவரது சகோதரி மகளை திருமணம் செய்து கொண்டார். தன்னை காதலித்து ஏமாற்றிய பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நண்பரசி வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அன்பரசி நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் கதறி பிடித்தனர்.  இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அன்பரசி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இன்று காலை ஆஸ்பத்திரிக்கு வந்த அன்பரசியின் உறவினர்கள் அவரது பிணத்தை வாங்க ...

கொலை

Image
வேலூரில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை 3 வாலிபர்கள் கைது வேலூர்,  வேலூரில் நேற்றிரவு குடிபோதையில் பைக்கில் சென்றுகொண்டு இருந்தபோது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வேலூர் வேலப்பாடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(55). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்றிரவு 9.45 மணியளவில் தனது பைக்கில் வெங்கடேசன் வேலூர் பில்டர்பெட்ட ரோட்டில் இருந்து கமிச்சரி பஜார் வழியாக சென்று கொண்டு இருந்தார்.  அப்போது அவ்வழியாக ஒரு பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் வெங்கடேசன் பைக் மீது மோதுவது போல் வந்தாக கூறப்படுகிறது. இதை வெங்கடேசன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டு ஆபசமாக பேசியுள்ளனர்.  ஒரு கட்டத்தில் 3 வாலிபர்களும் சேர்ந்து வெங்கடசனை கையால் சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து 3 வாலிபர்களும் தப்பி ஓட்டம் பிடித்தனர். உடனடியாக அக்கபக்கத்தினர்வெஙகடேசனை மீட்டு வேலூர் பெண்ட்லேன்ட் மருத்த...

ஆய்வு

Image
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்திவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு வருகை புரிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு மதுரை மாவட்ட திமுக மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆய்வு

Image
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்திவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு வருகை புரிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு மதுரை மாவட்ட திமுக மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.