பலி

மின்சாரம் தாக்கி ப்ளஸ்2 மாணவி பலி; வாட்டர் ஹீட்டர் பயன்படுத்திய போது பரிதாபம்

ஜோலார்பேட்டை,செப்

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனுார் பெருமாள் சாமி கோயில் வட்டத்தை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மனைவி தேவி. இவர்களின் மகள் ரத்தினா தேவி(17).இவர், தாமலேரி முத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

மேலும், ரத்தினா தேவியின் பெற்றோர் பாண்டிச்சேரியில் கட்டட தொழிலாளியாக உள்ளனர்.இதனால் ரத்தினதேவி தனது பாட்டி பானுமதியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில், ரத்தினா தேவி நேற்று மாலை குளிப்பதற்காக, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்திய போது, அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது.இதில் ரத்தினாதேவி துாக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது பாட்டி பானுமதி கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் அங்கு சென்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ரத்தினா தேவியின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை