நல்ல நேரம்
பாலாற்றில் உள்ள ஆக்கரமிப்புக்களை அகற்ற வேண்டும். பாலாற்றின் இரு கரைகளை அளவிட்டு கரைகளில் தடுப்பு சுவர் அமைத்து தோல் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.
ஆம்பூர் பகுதியில் பாலாற்றங்கரைகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சுத்தம் செய்யாமல் வெளியேற்றுவதால் பாலாறு மாசுபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அப்போது கோவில் நிலம் ஆக்கரமிப்பு எப்போது அகற்றப்படும் என தலைவர் ஜெய்சங்கர் கேட்டதற்கு, ஆய்வு நடத்திய பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.
ஒவ்வொரு முறை மனு கொடுக்கும் போதும் இப்படித்தான் கூறுகிறீர்கள், ஆக்கரமிப்பு அகற்றும் தேதியை உடனே சொல்ல வேண்டும், தவறினால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என ஜெய்சங்கர் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களை வெளியேற்றும்படி போலீசாருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். போலீசார் அவர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment