ஊர்வலம்
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு
********
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜி சரளா தலைமை தாங்கினார் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார் உதவி தலைமை ஆசிரியர் எம் மாரிமுத்து வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் கௌசல்யா புவனா துளசி ஜே செலின் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
இந்த நிகழ்வில் வாக்களிப்பது சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகள் ஊர்வலம் சென்றனர் பின்னர் பள்ளி வளாகத்தில் வாக்காளர் தின உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர் முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்
Comments
Post a Comment