வாபஸ்
*ஆசிரியர் பணி இடைநீக்கம் இரத்து செய்ய கோரி போராட்டம்*
மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு போராட்டம் வாபஸ்
&&&&&&&
வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் 4500 ஆசிரிய ஆசிரியைகள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டம் நடைபெற்றது. மாலை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஆர்.சுப்புலட்சுமி அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு போராட்டம் வாபஸ்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.மணிமொழி, முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ், ஆ.ஜோசப் அன்னையா அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர் ஜெயக்குமார் ஜி.டி.பாபு, எஸ்.எஸ்.சிவவடிவு, எம்.எஸ்.செல்வகுமார், கே.ஜெகதீசன், அக்ரி இ.ராமன், ஜி.சீனிவாசன், ஏ.வி.கவியரசன், கே.சங்கர், ஜி.கோபி, ஜெயகாந்தன், தலைமையாசிரியர்கள் எம்.சினேகலதா, பாஸ்கர், எஸ். ராஜேஷ்கண்ணா, ஆகியோருடன் பாதிக்கப்பட்ட ஆசிரியரும் பங்கேற்றார். அப்போது பேசியர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை உடன் மேற்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர் மீதான நடைவடிக்கை முற்றாக விரைவில் தீர்க்கப்படும் என்றும் எனவே தாங்கள் மேற்கொள்ள போராட்டத்தினை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர்களின் உறுதிமொழியினை ஏற்று உடனடியாக போராட்டத்தினை விலக்கி கொண்டனர்.
முன்னதாக காங்கேயநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவிகள் செயலுக்காக ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்தது கண்டித்து அனைத்து வகை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment