செய்திகள்

இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் இதுவரை...

இனி அப்படி சொல்வோமா???
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறித்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை. 

அதில் ஒரு பொருளின் அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை.

கி.மு. 8 - ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக ‘இரும்பு’ அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறது என்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள்.

‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கொல்லன்(கம்மாளர் சமூகம்)

‘இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.’ - என 

பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பறைச்சாற்றுகிறது. 

‘அதியமான் நெடுமான் அஞ்சி’
அவரது தலைநகர் - தகடூர்.

இரும்பை வெட்டியெடுத்து அதை தகடாக்கும் தொழில் செய்யும் ஊர் என்பதால் அதற்கு தகடூர் என்று பெயர். இரும்பு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அதியமான், கடல் கடந்து பல்வேறு தேசங்களில் தனது இரும்பு வணிகத்தை நிலை நாட்டினார். அதிலொன்று துருக்கி நாடு. உருக்கி என்பது தான் துருக்கி என்று விளங்கியிருக்க கூடும். அந்த துருக்கியில் இன்றும் அதியமான் பெயரில் நகரம் இருக்கிறது. 

ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் வந்த அந்த வெள்ளக்காரன்தான் இரும்பை கண்டுப்பிடித்தான் என்று திரித்து எழுதப்படுகிறது வரலாறு. ஆதிச்சநல்லூர் வரலாறு மட்டுமல்ல ; ஆதிதமிழர்களின் வரலாறுகளிலும் இந்த திரிபுவாத கும்பலில் கைங்கர்யம் நிறைய உண்டெனும் புரிதல் ப்ரியனுக்கு உண்டு.

தாழி பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துக் கீறல்களெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், இந்த தாளிப்பனைகள் பெற்றெடுத்த ஓலைச்சுவடிகளில் உழுத எழுத்தாணி ஒன்றுபோதுமே, தமிழர் இருப்பின் வரலாற்றுக்கு சாட்சியாக, இரும்பின் வரலாற்றுக்கு சாட்சியாக. 
ரிக் வேதத்தின் உண்மையான பெயரே உருக்கு வேதம் என்பது தான். அதாவது உலோகங்களை உருக்கும் தொழில் நுட்ப ரகசியம் தான்.

ஆதிச்சநல்லூர் என்கிற 
ஆதி ‘எச்ச’ நல்லூர் மட்டுமல்ல; 
அதையும் தாண்டி, நமது கவனத்தை திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை மீதும் வைத்தாக வேண்டியது வரலாற்றின் தேவையாகும்.

பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த 
பழைய கற்காலக் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அங்குதான்... 🌹


பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம் மற்றும் 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பு 

இதற்கு மாற்றாக ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது

  புத்தாண்டு கொண்டாட்டம் - புதுச்சேரியில் குவியும் சுற்றுலா பயணிகள்*

புதுச்சேரியில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

இன்று மதியம் முதல் ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை

கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடல்

பொதுமக்கள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக பார்க்கிங் ஏற்பாடு

  திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலர் வெளியீடு*

திருவள்ளுவர் சிலை தோரண வாயிலுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம்

திருவள்ளுவர் சிலை தோரண வாயிலுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

கடற்கரை சாலைக்கு திருவள்ளுவர் சாலை என பெயர் சூட்டல்

ஏ.ஆர்.ரகுமான் இசையில், கமல்ஹாசன் வரிகளில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு பாடல்

  சபரிமலையில் குவிந்து வரும் ஐயப்ப பக்தர்கள்*

4 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள்

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

நேற்று 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்

இன்று 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

ஐயப்பனை தரிசிக்க காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்


"33 சதவீதம் பெய்த வடகிழக்கு பருவமழை''*

"தென்மேற்கு பருவமழை 18 சதவீதமும், வடகிழக்கு பருவமழை 33 சதவீதமும் பெய்துள்ளது

ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 1,171 மீட்டர் மழை பதிவாகி உள்ளது" - இந்திய வானிலை ஆய்வு மையம்

  "அரசு பணி - 10,701 பேர் தேர்வு''*

"இந்த ஆண்டு 10,701 பேர் பல்வேறு துறை சார்ந்த அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்"

 - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ராபின் சர்மா நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம்*

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார யுக்திகளை வகுக்க ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம்  

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கும், மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சிக்கும், மகாராஷ்டிராவில் சிவ்சேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவிற்கும் தேர்தல் யுக்திகளை வகுத்து கொடுத்தது ராபின் சர்மாவின் SHOWTIME நிறுவனம்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை