மூட்டு அறுவை நறுவீசாதனை

வேலூர்     
 
  வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை  - நறுவீ மருத்துவமனையின் தலைவர் சம்பத் பேட்டி 
 


 வேலூர்மாவட்டம்,வேலூர் நறுவீ மருத்துவமனையில் மூட்டு நோயால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்களாத்தை சேர்ந்த 54 வயது பெண் நோயாளிக்கு வேலூர் நறுவீ மருத்துவமனையில் ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோபோ கொண்டு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் கூறியதாவது:வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வருகிறது. அளிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் இம்மருத்துவமனையின் மூலம் நடைப்பெற்று வருகிறது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இந்த கால கட்டத்தில் இம்மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இம்மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, குடல் நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இம்மருத்துவமனையில் இருதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சிகிச்சை செய்ய அங்கீகாரம் உடலுறுப்பு மாற்று சிகிச்சை அங்கிகாரம்  வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. தற்போது மற்றொரு நிகழ்வாக மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பசுதா சத்பதி என்ற பெண் நோயாளி பல்வேறு நோய் சம்மந்தமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பலனில்லாமல் வேலூர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை நறுவீ மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவரது கால் முட்டி முற்றிலும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவருக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ரோபோ மூலமாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குழுவினர் இங்கிலாந்து நாட்டின் ஸ்மித் & நெஃப்யு   நிறுவனத்தின் தயாரிப்பான பிரத்யேக ரோபோ மூலம் அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது.வழக்கமாக ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அதிக இரத்த போக்கு, திசு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கையாள வேண்டியிருக்கும். ஆனால் ரோபோ கொண்டு அறுவை சிகிச்சை செய்வதின் மூலம் அதிக இரத்த போக்கு மற்றும் திசு பாதிப்பு தடுக்கப்படும். முக்கியமாக எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை ரோபோ துல்லியமாக கணித்து தருவதின் மூலம் குறைந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியும் மேலும் நறுவீ மருத்துவமனையின் சார்பில் தீ விபத்தால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் ஒன்றை அண்மையில் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள தீ பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய மாணவர் படையினருக்கு   பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக இதற்கான பயிற்சிகள் வேலூர் நறுவீ மருத்துவமனையில் விரைவில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் இதற்கான பயிற்சிகளை வழங்க உள்ளனர் என கூறினார் 
பேட்டியின் போது  மருத்துவமனை  , செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், எலும்பியல் துறை தலைமை மருத்துவர் டாக்டர் வெர்னன் லீ, தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன், பொது மேலாளர் நிதின் சம்பத், அபிராமி நிதின் ஆகியோர் உடன் இருந்தனர். 


Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்