முகத்துக்குமுன்னால்

_*முகத்துக்கு*_  
     _*முன்னால்*_ 

_*முள்ளம்பன்றிகளால் ஒன்றோடு ஒன்று நெருங்கி வாழ முடியாது.*_ _*அவற்றில் காணப்படும் முட்கள் காரணமாக எதிரிகள் மட்டுமல்ல,*_ _*சொந்த குட்டிகளைக் கூட*_

_அரவணைக்க முடியாது._

_*குளிர்காலம் வந்து விட்டால் முட்களின் குத்துக்களை தாங்கிய வண்ணம் அவைகள் ​வெப்பத்தைத் தேடி நெருக்கமாக வந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.*_

_வெப்பம் கூடும் போது குளிர்ச்சியை தேடி_
_தூரமாகிவிடும்._ _இப்படியே கிட்ட வருவதும் தூர செல்வதுமாக அவைகளின் குளிர்கால_

_*இரவுகள் கழிகின்றன.*_

_அதிகம் நெருங்குவதால் காயங்கள் அதிகரிக்கும், அதிகம் விலகுவதால் உயிருக்கு ஆப்பத்தாகிவிடும்._

_*மனிதர்களுடான நமது உறவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டும். நம்மில் யாரும் முட்கள் இல்லாதவர்கள் இல்லை.*_

_வலிகளை சுமக்காமல் உறவுப் பாலத்தை கட்டியமைக்க முடியாது._

_*குறைகள் இல்லாத நண்பனை தேடியவன்*_

_காலமெல்லாம் தனித்து வாழ வேண்டி வரும்._

_*குறைகள் இல்லாத துணையை தேடியவன்*_

_காலமெல்லாம் திருமணம் முடிக்காமல் வாழ வேண்டி வரும்._

_*சச்சரவு இல்லாத சகோதரன் தேடியவன்*_

_காலமெல்லாம் தேடிக்கொண்டே இருப்பான்._

_*குறைகள் இல்லாத உறவினர்களை எதிர்பார்த்து வாழ்பவன் காலமெல்லாம் உறவுகளை துண்டித்து வாழ வேண்டி வரும்.*_

_குறைகளையும், பிழைகளையும் சுமக்காமல் வாழ்க்கை வண்டி நேராக பயணிக்காது._

_*மகிழ்ச்சியாக வாழ விரும்பினால்*_

_எல்லாவற்றுக்கும் விளக்கம் தேடிப் போகாதீர்கள்._

_*எல்லாவற்றையும் அலசி ஆரயாதீர்கள். எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்யதீர்கள்.*_

_மாணிக்கமா, மரகதமா என்று தேடிப் பார்த்தவனுக்கு சுட்ட செங்கல் என்று தெரிய வந்த கதை போல் ஆகிவிடும்._

_*யாரையும் அளவுக்கதிகம் தெரிந்தது கொள்ள முற்படாதீர்கள்.*_

 _முகத்துக்கு முன்னால்* எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதோடு நாம் நின்றுகொள்வது நமக்கு நல்லது._

🌹

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்