நண்பன்
_*வாழ்க்கை என்னும் அருவியில்*_
_*கவலைகள் என்னும் அணைகள் உண்டு...*_
_*குறிக்கோள் என்னும் பாதையில் கரை புரண்டு நீ சென்றால்,*_
_*கஷ்டங்கள் என்னும் கல் பாறைகளைத் தாண்டி, கடலென்னும் வெற்றி உனக்குண்டு.*_
_கடவுளை விடச் சிறந்த நண்பன் யாரும் இல்லை. நம் உடலை விட நமக்கு நெருங்கியவன் இறைவனே. மிக அருகில் உள்ளவற்றை அடையாளம் காண்பது சிரமம்தான்._
_*நம்மை தினமும் பாதுகாக்கும் ஆத்ம பந்து சர்வேஸ்வரன் ஒருவனே. பிறவிகள் கழிந்தாலும் ஜீவனை விடாத பந்தம் இறைவனுடையதுதான். இந்த உண்மையை அறியாமல் உழன்று கொண்டிருக்கிறோம்.*_
_நண்பன் எது செய்தாலும் நம் நன்மைக்காகவே என்ற நம்பிக்கை இருந்தால் தைரியமாக இருப்போம். அதிலும் சாதாரண நண்பனா இறைவன்_
_*நம்மை முன்னும் பின்னும் அறிந்தவன். முக்காலமும் உணர்ந்தவன்.*_
Comments
Post a Comment