பாராட்டு விழா

பணி ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி காசாளர் தினகரனுக்கு  சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பினர் பாராட்டு

வேலூர்
சிவில் ஓய்வூதியம் பெறுவோர் கூட்டமைப்பின்  சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் செங்காடு இந்தியன் வங்கியின் காசாளராக 26 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற அ.தினகரனுக்கு பாராட்டு விழா வங்கி கிளை வளாகத்தில் நடைபெற்றது. 
 இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் விகாஸ் சோப்ரா தலைமை தாங்கினார்.   உதவி மேலாளர் போஸ் சந்திரகாந்த் வரவேற்றுப் பேசினார். 
வங்கி அலுவலர்கள் ரஞ்சித்குமார் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வங்கியின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.  சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பிலும் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பொன்னாடை போர்த்தி பாராட்டி பேசினார்.
 ஓய்வு பெற்ற சார் பதிவாளர் க.சக்கரவர்த்தி, சென்னை ச.கோபாலகிருஷ்ணன், ஆற்காடு ஜி.கணேஷ், நகை மதிப்பீட்டாளர் ராஜி, தினேஷ், குப்புலட்சுமி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பலராமன், ஞானசௌந்தரி, நிர்மலா, விஜயன் வங்கியில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் உள்ளூர் வாடிக்கையாளர்களும் பங்கேற்று ஓய்வு பெற்ற வங்கி கிளையின் காசாளர் அ.தினகரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்தனர்
  முடிவில் வங்கியின் காசாளர் அ.தினகரன் ஏற்புரையாற்றினார்.  அன்னாரின் துணைவியார் திலகம் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்