சிரசு திருவிழா
குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்
வேலூர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெளடண்யா மகாநதி ஆற்றங்கரை ஒரம் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1 ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்இந்நிலையில் இந்த ஆண்டு இன்று வைகாசி 1 கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது முன்னதாக காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாநேற்று கெங்கையம்மன் தேர் திருவிழாவை தொடர்ந்து இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறதுமுன்னதாக தரணம்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் வரும் கெங்கையம்மன் சிரசை காண தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா பாண்டிச்சேரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்மேலும் சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்வழிநெடுகிலும் சூரத் தேங்காய் உடைத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்மேலும் பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்தும் புலி ஆட்டம் சிலம்பாட்டத்துடன் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர் இந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சிறப்பு பேருந்துகளும் இயக்கபடுகிறது
Comments
Post a Comment