Posts

Showing posts from April, 2025

செய்திகள்

Image
 வேலூர்      29-4-25 குடியாத்தம் பகுதியில் இஸ்லாமியர்களின் கபர்ஸ்தானுக்கு சுற்றுசுவர் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் நிலையில் உள்ள நிலையில் அதனை விரைந்து முடித்து சுற்றுசுவர் அமைத்து தர கோரி இஸ்லாமியர்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்  ____________________________________________        வேலூர்மாவட்டம்,குடியாத்தம் தாழையாத்தம் ஜோகிமடம் என்ற இடத்தில் இஸ்லாமியர்களின் கபர்ஸ்தான் எனப்படும் மயானம் உள்ளது இங்கு சுற்றுசுவர் அமைத்து தர கோரி இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இவர்களுக்கு ரூ.63 லட்சம் திட்டமதீப்பீடு சுற்றுசுவர் அமைக்க தயார் செய்யப்பட்டுள்ளதாக கடிதம் வந்துள்ளது ஆனால் மூன்றாண்டுகளாகியும் இதுவரையில் சுற்றுசுவர் அமைக்கவில்லை இந்த நிலையில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த இஸ்லாமிய மக்கள் ஆட்சியர் சுப்பு லெட்சுமியை நேரில் சந்தித்து மனுவினை அளித்தனர் அதில் விரைந்து சுற்றுசுவர் அமைக்க உரிய நடவ...

உதவி

Image
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன் நல்லதம்பி (படத்தில் இருப்பவர்) .... கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார். ‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார். காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன். அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார். ‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார். நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார். ‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக...

திருச்சிற்றம்பலம்

Image
#திருச்சிற்றம்பலம்  சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை தூமத்தம் வாளரவஞ் சூடி னானை அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே. திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் - ஆறாம் திருமுறை, திருக்கீழ்வேளூர். #திருச்சிற்றம்பலம் சூளை கே எம் ஆனந்தன் வேலூர் மாவட்டம் 🙏

வாழ்க்கை

Image
💐 *இன்றைய சிந்தனை* 💐 ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️  *நம் வாழ்க்கை நம் கையில்*  ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ வாழ்க்கை ஒரு *"வரம்"* என்றால், அதில் நாம் *"அதிர்ஷ்டசாலிகள்"...* வாழ்க்கை ஒரு *"அறிவியல்"* என்றால் அதில் நாம் *"விஞ்ஞானிகள்"...* வாழ்க்கை ஒரு *"போராட்டம்* என்றால் அதில் நாம் *"போராளிகள்"...* வாழ்க்கை எப்படி இருந்தாலும் நாம்தான் வாழ்ந்து காட்ட வேண்டும்..!! 🌷  *_காலை வணக்கம்_*  🌷 💐 *இன்றைய சிந்தனை* 💐 ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️                            *தீர்வு*  ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ அத்தனைக்கும் தீர்வு உண்டு.. ஆனால், தீர்வு என்பது நாம் தீர்மானித்தபடி அமையாது... காலம் தீர்மானிக்கும்படி தான் அமையும்....  🌷 *_இனிய காலை வணக்கம்_* 🌷 தினம் ஒரு புத்தக மொழி 📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹 வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் சிறுசிறு விஷயங்களுக்கும் நன்றி உள்ளதாக இருக்கப் பழகுங்கள். கட்டுக்குள் கொண்டு  வர முடியாத செயல்களுக்காக வருத்திக் கொள்ளாதீர்கள்.         ...

ஆர்பாட்டம்

Image
வேலூர்          பள்ளிகொண்டா அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் வக்ஃபு வாரியம் திடீரென ஐந்து தலைமுறைகளாக குடியிருக்கும் மக்களின் 300 வீடுகள்  தங்களுக்கு சொந்தம் என வக்ஃபு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதால் இரண்டு தரப்பிலும் அங்கு பதட்டம் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இருசமுதாயங்களிடையே மோதல் ஏற்படும் சூழல்  __________________________________________         வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு தொகுதிக்குட்பட்ட இறையன் காடு ஊராட்சிக்குட்பட்ட  காட்டுக்கொல்லை என்ற கிராமம் உள்ளது இதில் இப்பகுதியில் மூன்று தெருக்கள் 500 வீடுகள் உள்ளன இவர்கள் 5 தலைமுறைகளுக்கு மேல் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர் இதற்கு சொத்து பத்திரம் மின் இணைப்பு குழாய் இணைப்பு உள்ளிட்ட பல ஆவணங்கள் உள்ளன இதில் வக்ஃபு வாரியம் 14-2-25 அன்று 300 வீடுகளுக்கு இந்த இடம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது எனவும் தாங்கள் வாடகை செலுத்த வேண்டுமெனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த இந்த மக்கள் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ் தலைமையில் 11-4-25 அன்று...

அதிர்ச்சி

Image
வேலூர்             எண்ணெயில் பொரித்து எடுத்த கோழி இறைச்சியுடன் புழுக்களையும் சேர்த்து சாப்பிட கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் செவிலியர் தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல் புதூர் பகுதியில்  ஆர்.எம் கோழி இறைச்சி மற்றும் மீன் இறைச்சி பக்கோடா கடை செயல்பட்டு வருகிறது.இந்த கடையில் நேற்று இரவு அதே பகுதியில் வசிக்கும் அர்ச்சனா என்ற செவிலியர் சிக்கன் பக்கோடா சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வாங்கி கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது சிக்கன் இறைச்சியுடன் புழுவையும் சேர்த்து எண்ணெயில் வறுத்து எடுத்து இருப்பது தெரியவந்தது.இதைக்கண்ட அந்த பெண் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறி இருப்பதாவதுநேற்று இரவு காட்பாடி அருகே உள்ள ஒரு கடையில் நான் சிக்கன் பக்கோடா வாங்கியதாகவும் அதை வீட்டிற்கு கொண்டுவந்து உண்பதற்காக திறந்து பார்த்தபோது.அதில் புழுக்களும் சேர்த்து வறுத்து எடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது இதை கண்ட தனது பிள்ளைகள் பதறி உள்...

செய்திகள்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்    நெமிலி அருகே ஆலப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. மூன்று வாலிபர்கள் பலி.மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள கீழ் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (வயது 23)அவரது நண்பர் பிரேம் வயது (23) ஆகியோர் சேந்தமங்கலத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அதேபோல் ஆட்டுப்பக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 21)மற்றும் அவருடைய நண்பர் ரஞ்சித் (வயது 21)ஆகியோர் ஆட்டு பக்கத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து இருந்து சேர்ந்தமங்கலம் நோக்கி வந்துள்ளனர்.அப்பொழுது ஆலப்பாக்கம் அருகே இருசக்கர வாகனங்கள் இரண்டும் அதிவேகமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர் இதில் கீழ் வெங்கடபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஆட்டுப்பக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து உள்ளனர் உடன் சென்ற ரஞ்சித் மற்றும் பிரேம் ஆகியோர் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர்.தகவல் அறி...

பயிற்சி வகுப்புக்கள்

Image
ஏ.பி.ஜெ அறக்கட்டளை சார்பாக விவசாய கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை பயிற்சி வகுப்புகள்  இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.ஜெ அறக்கட்டளை பசுமை திட்டத்தின் மூலமாக அரக்கோணத்தை சேர்ந்த டான் போஸ்கோ வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் கடந்த ஒரு வரமாக இயற்கை சார்ந்த விவசாயம் வேளாண் தோட்டக்கலை போன்ற பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டு மற்றும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இறுதியாக ஆற்காடு ஏ.பி.ஜெ அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் தொழிலதிபர் தர்மிசண்ட் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் உடற்பயிற்சி ஆசிரியர் கபிலன் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

திறப்பு

Image
*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      *_ *★❀━━━━🄲🅁🄺━━━━❀★* *🔹🔸கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் ஜூன் 16ல் திறப்பு* *✍️சென்னை:* *▪️. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.* 🔘.  தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடந்தது.  1 முதல் 3ம் வகுப்புகளுக்கு ஏப்.15 முதல் 21ம் தேதி வரை காலையில் முழு ஆண்டு தேர்வு நடந்தது.  மேலும் 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்புகளுக்கு ஏப்.9ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதியம் தேர்வு நடந்தது.  இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22ம் தேதியில் இருந்தும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 🔘. இந்த சூழலில் 2025-26ம் கல்வியாண்டில் 2.6.2025 (திங்கட்கிழமை) அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்...

ரத்து

Image
*துரைமுருகன் வழக்கில் வேலூர் கோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்*  சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 3.90  கோடி ரூபாய் வரை சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை வேலூர் நீதிமன்றம் ஏற்கனவே விடுவித்து தீர்ப்பளித்து இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

அபராதம்

Image
#𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚:  *🔹🔸ஆசிரியைக்கு அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்* *தோப்புக் கரணம் போடச் சொன்ன ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்* *▪️. சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவியை 400 முறை தோப்புக் கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!* *▪️. 7ம் வகுப்பு மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், அபராத தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.* #Sivaganga | #HumanRights *_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*     *★❀━━━━🄲🅁🄺━━━━❀★*

செய்திகள்

Image
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அனைத்து பக்தர்களின் உடமைகளையும் அலிபிரி  மலைப்பாதையில் தீவிர சோதனை. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரங்கல்* காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன-அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.  உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.  பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன- டொனால்டு ட்ரம்ப் *இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம்* ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பது, காயமடைந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்  *வாணியம்பாடியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 24 மணி நேரம் கெடுதான் உள்ளது - நாராயணன் திருப்பதி

Image
வேலூர்    27-4-25 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்னும் 24 மணிநேரம் தான் கெடு இருக்கிறது அமைச்சரா அல்லது சிறை செல்வாரா என்பது தெரிய வரும் - தமிழக ஆளுநர் கல்வி குறித்து கூறிய கருத்துக்கள் கவணிக்கபட வேண்டியவை நாராயணன் திருப்பதி வேலூரில் பேட்டி _____________________________________________       வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாற்றுத்திறனாளர்கள் நலத்துறையின் சார்பில் ஆர்.இ.சி மற்றும் சி.எஸ்.ஆர் ,இணைந்து 415 மாற்றுத்திறனாளர்களுக்கு நவீன செயற்கை கால் அவையங்கள் ஊன்றுகோல்கள் காதோலி கருவிகள் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் மடக்கு நாற்காலிகள் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள் மூட நீக்கியல் சாதனங்கள் சுமார் ரூ.53 லட்சம் மதிப்பில் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இதில் நாடாளுமன்ற உறுப்பினர்  கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் ஆகியோர் பங்கேற்றனர் இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர்,இசி பொது துறை நிறுவனங்களின் இயக்குநர் நாராயணன் திருப்பதி நலத்திட்ட உதவி...

அஞ்சலி

Image
நாள்.27.04.2025 *பஹல்காம் துப்பாக்கி சூடு உயிர் நீத்த 28 பேருக்கு அஞ்சலி*  *குமரன் நர்சிங் கல்லூரியில் காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் சார்பில் நடைபெற்றது* &&&&&&&&&&&&&& காட்பாடி ரெட்கிராஸ் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், குமரன் மருத்துவமனை இணைந்து குமரன் நர்சிங் கல்லூரி மாணவிகள் பஹல்காம் துப்பாக்கி சூடு சம்பத்தில் உயிர் நீத்த 28 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.   நிகழ்விற்கு அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  முன்னதாக கல்லூரி முதல்வர் மீனாகுமாரி வரவேற்று பேசினார்.   இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மற்றம் வேலூர் சி.எம்.சி கிளை செயலாளர் டாக்டர் அ.மு.இக்ராம் சிறப்புரையாற்றினார். அவை துணை தலைவர் குமரன் ஆர்.சீனிவாசன் மத நல்லிணக்க உறுதி மொழியை வாசிக்க  அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ரெட்கிராஸ் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன், ஆசிரியை பேபி ஆர்த்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர...

பாபா

Image
*!! ॐ साई राम !!* *श्री साईबाबा संस्थान विश्वस्त व्यवस्था,शिर्डी* *!! ॐ Sai Ram !!* *Shri Saibaba Sansthan Trust, Shirdi* ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈  *आरती :-शिर्डी माझे पंढरपुर*   *शुक्रवार २५ एप्रिल २०२५*    *Aarti :-Shirdi Majhe Pandharpur*

சிந்து நதி

Image
*💥 சிந்து நதி நீர் வரலாறு! பாகிஸ்தான் பாதிக்கப்படப் போவது எப்படி?* சிந்துநதி பகிர்வு ஒப்பந்த்தை இந்தியா ரத்து செய்துவிட்டதாக தேசிய அரசு அறிவித்துவிட்டது, இதன் பொருள் இனி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா தடுக்கும் என்பது வடமேற்கு இந்தியாவின் செழிப்புக்கும் வழமைக்கும் காரணம் சிந்துநதி, இது தனி நதி அல்ல, காவேரி போல் ஏகபட்ட கிளைநதிகளை கொண்டது, இந்தியா எனும் பெயர் சிந்து எனும் பெயரில் இருந்துதான் உருவானது சி எனும் பெயர் மேற்கே ஹி என மாறும், ஹிந்து ஹிந்துமதம் என சிந்து நதி கரையின் பெயரால்தான் இந்தியா என்றும் இந்துமதம் என்றும் பெயரே உருவாகி வந்தது அந்த சிந்து நதி 1947ம் ஆண்டும் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்க்கு சென்றது ஆனால் பாகிஸ்தானுக்கு பெரும் அச்சம் இருந்தது அல்லது பெரும் அச்சத்தை உணர்ந்தார்கள் , சிந்துநதி என்பது தனியாக உருவாகி வந்தாலும், ராவி, பியாஸ் சட்ஜெஜ்,  செனாப், நீலம் அல்லது ஜீலம் எனபல நதிகளின் தொகுப்பு தனியாக சிந்து பெரிய ஆறுதான் ஆனால் மிக பெரியது அல்ல துணையாறுகள் அதன் பலன் > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkN...

ஆறுதல்

Image
எர்ணாகுளம்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நா.ராமச்சந்திரனின் குடும்பத்தை #CPIM மத்தியக்குழு உறுப்பினரும், #AIDWA தலைவருமான தோழர் பி.கே.ஸ்ரீமதி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  ஸ்ரீ ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தியும், மனைவி ஷீலா டீச்சரும் இக்கொடூரமான தாக்குதலின் விபரங்களையும், உள்ளூர் மக்களிடமிருந்து கிடைத்த உதவி மற்றும் ஆதரவையும் விளக்கினார்.  "குறிப்பாக எங்கள் ஓட்டுநர்கள் முசாபிர் மற்றும் சமீர், என் சகோதரர்களைப் போல எங்களையும் என்னுடைய குழந்தைகளையும் கவனித்துக் கொண்டனர்" என ஆர்த்தி குறிப்பிட்டுச் சொன்னார். #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack

தேசிகர்

Image
🙏 *ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்* 🌹 *ஸ்வாமிந் ! பவத் த்யான ஸுதாபிஷேகாத்* *வஹந்தி தந்யா : புலகாநுபந்தம் !* *அலக்ஷிதே க்வாபி நிரூடமூலம்* *அங்கேஷ்விவாநந்ததும் அங்குரந்தம் !!* *ஸ்வாமிந் ! ப்ரதீசா ஹ்ருதயேந தந்யா :* *த்வத்த்யாந சந்த்ரோதய வர்த்தமாநம் !* *அமாந்தமாநந்த பயோதிமந்த :* *பயோபிரக்ஷணாம் பரிவாஹயந்தி !!*🌹 *ஸ்ரீ வேதாந்ததேசிகர்..*   🙏 🙏 *ஸ்ரீ மதுராஷ்டகம்* *அதரம் மதுரம் வதனம் மதுரம்* *நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்!* ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் !! (1) வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் வலிதம் மதுரம் ! சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் !! (2) வேணு-ர் மதுரோ ரேணு- ர் மதுர : பாணி-ர்மதுர : பாதௌ மதுரௌ *ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்* *மதுராதி பதேரகிலம் மதுரம் !!*(3) *ஸ்ரீ வல்லபாச்சார்யர்*....🙏

கோபம்

Image
எல்லா அழுகையும் ஒரே அர்த்தத்தை கொண்டதில்லை. எல்லா சிரிப்புகளும் ஒரே நோக்கத்தை கொண்டதில்லை.* *எது எளிதானதோ அது நீண்ட காலம் நீடிப்பதில்லை. எது நீண்ட காலம் நீடிக்கிறதோ அது எளிதாக கிடைப்பதில்லை.* *மாற்றங்களை உங்களால் மாற்றிக் காட்ட முடியும், ஆனால் மாற்றியவர்களை உங்களால் மாற்ற முடியாது.* *நீங்கள் நீங்களாக வாழ விரும்பினால் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நீங்கள் மற்றவர்களை போல வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை.*                                                                                                   ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ *இருப்பது போதுமென்று நீங்கள் நினைத்தால்,* *உங்களுக்கு நிம்மதி உறுதியாக இருக்கும்...* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ *காயங்கள் காயும் முன்பே கயவரின் தீமையை மறந்துவிடு..* *காயமிது ...

செய்திகள்

Image
அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை நீடிக்கம்  இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்ப்பது நல்லது. திருப்பத்தூர் அருகே கணவன், மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை... இறந்தவர்களின் சடலங்களை மீட்டு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை..* கோவை ஆழியாறு : சென்னை சவிதா கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

காஷ்மீரை ஆண்ட கடைசி மன்னன்

Image
இதே ஏப்ரல் 28.,1961 *இப்போது ஹாட் டாப்பிக்கில் இருக்கும் ஜம்மு காஷ்மீரின் கடைசி மன்னர் ஹரி சிங் நினைவு நாளின்று* செப்டம்பர் 1895ல் ஜம்முவின் அமர் மஹால் மாளிகையில் பிறந்தார் மகாராஜா ஹரி சிங். இவரது தந்தை ராஜா அமர் சிங்-கிற்கு பிறந்த மகன்களில் உயிர் பிழைத்த ஒரே மகன் ஹரி சிங் மட்டும் தான். ராஜா அமர் சிங்கின் சகோதரர் பிரதாப் சிங் அவர்கள் தான் இதற்கு முன் ஜம்மு காஷ்மீரின் மன்னராக விளங்கி வந்தார். பிரதாப் சிங்கின் மரணத்திற்கு (செப்டம்பர் 1925) பிறகு, அவரது தத்துப்பிள்ளை ஜகத் தேவ் சிங்கிற்கும், ஹரி சிங்கிற்கும் இடையே யார் அரியணை ஏறுவது என்ற சலசலப்பு நிலவிய போது, பிரிட்டிஷ் தலையிட்டு, மகாராஜா ஹரி சிங்கிற்கு அரியணையை வழங்கியது.1926 பிப்ரவரி 22 - 26 நாட்களில் மகாராஜா ஹரி சிங்கிற்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. மன்னராக பொறுப்பேற்ற பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைமுறையை கொண்டு வந்து பிரஜா சபா அமைய ஏற்பாடுகள் செய்தார் ஹரி சிங். இந்த பிரஜா சபாவில் 75 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர் (12 அரசு அதிகாரிகள், 16 ஸ்டேட் கவுன்சிலர்கள், 14 பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 33 தேர்ந்தெடுக்...